தமிழக ஆளும் அரசு மதவிரோதப் போக்கு மாறவேண்டும் - தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்

மத்திய மதவாத பாஜக அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வரும் தமிழக அதிமுக அரசினைக் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவ்வாமைப்பின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

சமீப காலமாக தமிழக அரசு மத்திய பாஜகவின் பினாமி அரசாகவே செயல்பட்டு வருகிறது. இதை மெய்ப்பிக்கும் விதமாக, மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடை விவகாரத்தில் மௌனம் காத்தது, நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசின் அநீதிக்கு சாமரம் வீசியது என்று பட்டியல் நீள்கிறது. அந்த வரிசையில், அனைத்துப் பள்ளிகளிலும் யோகா கட்டாயமாக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் அறிவித்துள்ளது.

தமிழக முதலமைச்சரின் இந்த அறிவிப்பு பாஜகவின் பினாமி அரசாக தமிழக அரசு செயல்படுவதை மீண்டும் உறுதிபடுத்தும் செயலாகும். முஸ்லிம்கள் உடற்பயிற்சிக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் அதில் யோகா பயிற்சியில் ஓம் என்ற வார்த்தையை உச்சரிப்பதும், சூரியனை வணங்குவது என்றும் ஒரு குறிப்பிட்ட மதத்தின் வணக்க வழிபாட்டு நிகழ்வுகள் அடங்கியுள்ளன. இப்படி ஒரு குறிப்பிட்ட மதத்தின் அனுஷ்ட்டானங்களை அனைவரும் பயிலும் பள்ளிகளில் கலப்பது என்பது ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல.

யோகாவில் சூரியனை வழிபடுவதும் ஒரு பயிற்சியாக உள்ளது. முஸ்லிம்கள் படைத்த இறைவனைத்தவிர வேறு யாரையும் வணங்கமாட்டார்கள். இந்த அடிப்படைக்கு மாற்றமாக உள்ள யோகா என்ற பெயரில் சூரிய வழிபாட்டை முஸ்லிம்கள் ஒருபோதும் அங்கீகரிக்கமாட்டார்கள்.

இந்த இந்திய திருநாட்டில் அவரவர் தான் விரும்பும் சித்தாந்தத்தை பின்பற்ற முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படைக்கு எதிராக அனைவரும் யோகா செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் கூறியிருப்பது இந்திய அரசியலமைப்பு சாசனத்தையே தரைமட்டமாக்கும் தேச விரோத செயல் ஆகும்.

எனவே, இந்த அறிவிப்பை தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...