முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்சனங்களைத் தொடர்ந்து தமிழக அரசு ஒரு நாளிலேயே ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.


சென்னை:பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனங்களைத் தொடர்ந்து, முதலமைச்சரின் சிறப்புப் பணி அதிகாரியாக (OSD) நியமிக்கப்பட்டிருந்த அவரது ஜோதிடர் ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் நியமனத்தை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.

தமிழக அரசின் அதிகாரப்பூர்வ உத்தரவின்படி, மே 12, 2026 அன்று வெளியிடப்பட்ட ஆணை எண் 675 மூலம் வழங்கப்பட்ட நியமனம், தற்போது மே 13, 2026 தேதியிட்ட ஆணை எண் 684 மூலம் திரும்ப பெறப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

“Officer on Special Duty to Chief Minister” பதவிக்கான நியமனம் உடனடியாக ரத்து செய்யப்படுவதாக அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த ரத்து நடவடிக்கை முதலமைச்சர் அலுவலகத்தின் குறிப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவில் தமிழக அரசின் முதன்மை செயலாளர் ரீட்டா ஹரிஷ் தக்கர் கையெழுத்திட்டுள்ளார்.

நியமனம் வெளியான சில மணி நேரங்களிலேயே அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஒரே நாளில் அந்த நியமனம் ரத்து செய்யப்பட்டிருப்பது அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், நியமனம் ஏன் ரத்து செய்யப்பட்டது என்பது குறித்து அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.

Newsletter

ஆதவ் அர்ஜுனாவை நீக்க வேண்டும்: கோவையில் கிருஷ்ணசாமி

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் குடும்பத்தினர் மீதா...

தங்க விலை உயர்வு: வரிச்சட்ட மாற்றம் கோரி கோவை நகை உற்பத்தியாளர்கள்

தங்க விலை உயர்வால் மூலதன நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த கோயம்புத்தூர் நகை உற்பத்தியாளர் சங்கம், வரிச்சட்ட மாற்றங்கள்...

பேரூர் டி.எஸ்.பி நடப்பயண ரோந்து; பொதுமக்களிடம் குறைகள் கேட்பு

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் பேரூர் டி.எஸ்.பி கால்நடை ரோந்து மேற்கொண்டு பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்...

கூடலூரில் அரசு பள்ளிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ சுனில் ஆனந்த்

கூடலூர் நகராட்சிக்குட்பட்ட அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட மேட்டுப்பாளையம் எம்எல்ஏ சுனில் ஆனந்த், பழுதடைந்த குடிநீர் தொட...

சரவணம்பட்டியில் கையகப்படுத்தப்பட்ட 73 வாகனங்கள்; உரிமையாளர்களுக்கு அழைப்பு

கோவை சரவணம்பட்டி காவல் நிலைய எல்லையில் கையகப்படுத்தப்பட்ட 73 இருசக்கர வாகனங்களை உரிய ஆவணங்களுடன் வந்து பெற்றுக்கொள்ள பொத...

நீலகிரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வாய்ப்பு

கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், இன்று கோவை உட்பட 10 மாவட்...