முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்சனங்களைத் தொடர்ந்து தமிழக அரசு ஒரு நாளிலேயே ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.


சென்னை:பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனங்களைத் தொடர்ந்து, முதலமைச்சரின் சிறப்புப் பணி அதிகாரியாக (OSD) நியமிக்கப்பட்டிருந்த அவரது ஜோதிடர் ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் நியமனத்தை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.

தமிழக அரசின் அதிகாரப்பூர்வ உத்தரவின்படி, மே 12, 2026 அன்று வெளியிடப்பட்ட ஆணை எண் 675 மூலம் வழங்கப்பட்ட நியமனம், தற்போது மே 13, 2026 தேதியிட்ட ஆணை எண் 684 மூலம் திரும்ப பெறப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

“Officer on Special Duty to Chief Minister” பதவிக்கான நியமனம் உடனடியாக ரத்து செய்யப்படுவதாக அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த ரத்து நடவடிக்கை முதலமைச்சர் அலுவலகத்தின் குறிப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவில் தமிழக அரசின் முதன்மை செயலாளர் ரீட்டா ஹரிஷ் தக்கர் கையெழுத்திட்டுள்ளார்.

நியமனம் வெளியான சில மணி நேரங்களிலேயே அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஒரே நாளில் அந்த நியமனம் ரத்து செய்யப்பட்டிருப்பது அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், நியமனம் ஏன் ரத்து செய்யப்பட்டது என்பது குறித்து அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.

Newsletter

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...