டிசம்பர் முதல் 500-க்கும் மேற்பட்ட ரயில்களின் பயண நேரம் குறைகிறது - ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்

ரயில்வே அமைச்சராக பியூஷ் கோயல் பொறுப்பேற்ற பின், பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, வரும் டிசம்பர் மாதம் முதல் தொலைதூரம் செல்லும் ரயில்களின் பயண நேரம் குறைக்கப்படுகிறது. 700 முக்கிய ரயில்கள் ஆய்வு செய்யப்பட்டதில், 500 ரயில்களின் வேகத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

50 எக்ஸ்பிரஸ் ரயில்கள், சூப்பர் பாஸ்ட் ரயில்களாக மாற்றம் செய்யப்படுகிறது. இதனால், தொலைதூர ரயில்களில் பயண நேரம் 2 மணி நேரம் வரை குறைக்கப்பட உள்ளது. 700-க்கும் மேற்பட்ட ரயில்கள், ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும் நேரமும் குறைக்கப்பட உள்ளது.  இதேபோல, எஞ்சின் மாற்ற எடுத்துக் கொள்ளும் காலம் அரை மணி நேரத்தில் இருந்து 20 நிமிடங்களாகக் குறைக்கப்படுகிறது. 23 ரயில் நிலையங்கள் அதிநவீன ரயில் நிலையங்களாக மாற்றப்படுகின்றன.

சிக்னல்களை சரிபார்த்தல், ரயில்தண்டவாளங்களைப் புதுப்பித்தல், மூன்றாவது வழித்தடத்தை அமைத்தல், பயணிகள் பாதுகாப்பு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். 12 மாதங்களுக்குள் ஆளில்லாத லெவல் கிராசிங்குகளை ஒழிக்கவும் ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

Newsletter

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...