கர்நாடகாவில் பிரபல கன்னட எழுத்தாளர் கல்புர்கி சுட்டுக்கொல்லப்பட்டது போன்றே, மூத்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் பெங்களூருவில் அவரது வீட்டில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பஞ்சாப் மாநிலம் மொகாலியில் வசிக்கும் மூத்த பத்திரிகையாளர் கேஜே சிங் மற்றும் அவரது 92 வயதுடைய தாயார் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவிக்கின்றனர். போலீஸ் உயர் அதிகாரிகள் அங்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கேஜேசிங் கொலைக்கு சிரோண்மணி அகாலிதள கட்சி தலைவர் சுக்பீர் சிங் பாதல் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கவுரி லங்கேஷை தொடர்ந்து, கேஜே சிங் என அடுத்தடுத்து மூத்த பத்திரிகையாளர்களின் கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பஞ்சாப் மாநிலம் மொகாலியில் வசிக்கும் மூத்த பத்திரிகையாளர் கேஜே சிங் மற்றும் அவரது 92 வயதுடைய தாயார் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவிக்கின்றனர். போலீஸ் உயர் அதிகாரிகள் அங்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கேஜேசிங் கொலைக்கு சிரோண்மணி அகாலிதள கட்சி தலைவர் சுக்பீர் சிங் பாதல் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கவுரி லங்கேஷை தொடர்ந்து, கேஜே சிங் என அடுத்தடுத்து மூத்த பத்திரிகையாளர்களின் கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.