ஐ.ஆர்.சி.டி.சி-யில் டிக்கெட் புக்கிங்குக்கு கட்டுப்பாடு! ஏழு வங்கிகளுக்கு மட்டுமே அனுமதி

ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தின் மூலம் ஏழு வங்கிகளைச் சேர்ந்த டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைக் கொண்டு மட்டுமே டிக்கெட் புக் செய்ய முடியும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.

பண மதிப்பு நீக்கம் நடவடிக்கையைத் தொடர்ந்து மத்திய அரசு பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக ஐ.ஆர்.சி.டி.சி மூலம் புக் செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு சேவைக் கட்டணமாகப் பிடிக்கப்படும் 20 ரூபாயை ரத்து செய்தது. மேலும், இந்த வருவாய் இழப்பை வங்கிகளுடன் பகிர்ந்துகொள்வதற்கு ரயில்வே நிர்வாகம் முயற்சி செய்தது. இழப்புத் தொகை 20 ரூபாயில் ஐ.ஆர்.சி.டி.சி 10 ரூபாயையும் வங்கி நிர்வாகம் 10 ரூபாயையும் பகிர்ந்துகொள்வதற்கு ரயில்வே நிர்வாகம் முயற்சி செய்தது. ஆனால், சில வங்கிகள் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அதையடுத்து ஏழு வங்கிகளின் கார்டுகளில் இருந்து மட்டும் ஐ.ஆர்.சி.டி.சி மூலம் டிக்கெட்டை புக் செய்ய முடியும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, இந்தியன் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, கனரா வங்கி, எச்.டி.எஃப்.சி வங்கி, யுனைடெட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்ட்ரல் வங்கிகளின் கார்டுகள் மூலம் மட்டுமே ரயில் டிக்கெட்டுகளை புக் செய்ய முடியும்.

Newsletter

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...