அகில இந்திய தொழிற்பழகுநர் (தனிநபர் தேர்வு) அறிவிப்பு

மத்திய அரசு வழங்கும் தேசிய தொழிற்பழகுநர் (NAC) பெறும் பொருட்டு, அரசு/ தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் குறிப்பிட்ட தொழிற்பிரிவில் பயின்று தேசிய தொழிற்சான்றிதழ் (NTC) தொழிற்பிரிவில் தனிநபராக அகில இந்திய தொழிற்பழகுநர் தொழிற் தேர்வில் கலந்து கொள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

தொழிற்பயிற்சி நிலையங்களில் பயின்று (ITI) தேர்ச்சி பெற்று தேசிய தொழிற்சான்றிதழ் பெற்றவர்கள், தொழிற்பழகுநர் பயிற்சியினை தொழிற்சாலைகளில் முடிக்காதவர்கள், தொழிற்பழகுநர் பயிற்சி வழங்கும் பட்டியலில் இடம்பெற்ற தொழிற் நிறுவனங்களில் நேரடி பணியாளர்களாக குறைந்தபட்ச அனுபவம் பெற்றவர்கள் மத்திய அரசு வழங்கும் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெற விரும்பினால் தனி விண்ணப்பதாரராக மத்திய அரசால் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்பழகுநர் தொழிற் தேர்வில் கலந்து கொள்ளலாம். 

தேர்வு கால அட்டவணை பின்வருமாறு:

  • 07.11.2017 - கோட்பாட்டுத் தேர்வு (theory) (காலை: 9.30 மணிக்கு), வேலைவாய்ப்பு திறன் தேர்வு (மதியம் : 02.30 மணிக்கு).
  • 08.11.2017 - தொழிற்சாலை கணக்கீடு மற்றும் அறிவியல் தேர்வு (காலை: 9.30 மணிக்கு), பொறியியல் வரைதல்(மதியம் : 02.30 மணிக்கு).
  • 09,10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் செய்முறைத் தேர்வு நடக்கிறது (காலை: 9.30 மணிக்கு).


கோவை, அம்பத்தூர், கிண்டி, வடசென்னை, வேலூர், திருச்சி, கடலூர், தஞ்சாவூர், சேலம், ஒசூர், தாராபுரம், மேட்டூர் அணை, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் / அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் அமைந்துள்ள தொடர் அறிவுரை மைய உதவி இயக்குநர்கள் ஆகியோரை தொடர்பு கொண்டு பிற விவரங்களை பெற்றுக் கொள்ளலாம். 

தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு மத்திய அரசு வழங்கும் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் (National Apprenticeship Certificate -NAC) வழங்கப்படும். 

தேர்வுக்கான விண்ணப்பம் அந்தந்த அரசு தொடர் அறிவுரை மையங்களில் உள்ள உதவி இயக்குநர்களை அணுகி பெற்று இதனை தட்டச் செய்து விபரங்களை பூர்த்தி செய்து, மேற்கூறப்பட்ட அரசு தொழிற்பயிற்சி நிலைய தொடர் அறிவுரை மையங்களில் தாங்கள் பணிபுரியும் நிறுவனம் வழியாக மட்டுமே சமர்பிக்க வேண்டும். 

தேர்வு கட்டணம் ரூ.200-ஐ 0230-LABOUR AND EMPLOYMENT -800- OTHER RECEIPTS, AC - CRAFTSMEN TRAINING SCHEME 05 - APPRENTICES ACT, DPC NO.0230-00800-AC-0508 என்ற கணக்குத் தலைப்பில் சார்பு கருவூலம்/மாவட்ட கருவூலங்களில் செலுத்துச்சீட்டு மூலம் செலுத்தலாம். 

Newsletter

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...

Heavy Rain, Strong Winds Lash Thudiyalur and Surrounding Areas

Heavy rain accompanied by strong winds lashed Thudiyalur and several parts of Coimbatore’s northern outskirts for more t...

துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை

கோவை துடியலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...