தோனிக்கு பத்ம பூஷண் விருது வழங்க மத்திய அரசுக்கு பி.சி.சி.ஐ., பரிந்துரை

கலை, அறிவியல், விளையாட்டு, இலக்கியம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு, மத்திய அரசு சார்பில் பத்ம விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுவர். அடுத்த ஆண்டுக்கான பத்ம விருதுக்களுக்கு தகுதியான நபர்களின் பெயர்களை பரிந்துரைக்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டது. 

இதனையடுத்து, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்த முன்னாள் கேப்டன் தோனியை, நாட்டின் உயரிய 3-வது சிறந்த விருதான பத்ம பூஷண் விருதுக்கு, பி.சி.சி.ஐ., பரிந்துரை செய்துள்ளது. தோனியை தவிர வேறு யாரையும் பத்ம விருதுகளுக்கு பி.சி.சி.ஐ., பரிந்துரை செய்யவில்லை. ஏற்கனவே தோனி, கேல் ரத்னா (2007), பத்ம ஸ்ரீ (2009) விருதுகள் பெற்றுள்ளார்.

இந்திய அணியின் வெற்றிக் கேப்டனாக வலம் வந்த தோனி(36),  இதுவரை 302 ஒருநாள் (9737 ரன்), 90 டெஸ்ட் (4876 ரன்), 78 சர்வதேச 'டுவென்டி-20' (1212 ரன்) போட்டிகளில் விளையாடி உள்ளார். இவரது தலைமையிலான இந்திய அணி, டெஸ்ட் அரங்கில் 'நம்பர்-1' இடம் பிடித்தது. இந்திய அணிக்கு மூன்றுவிதமான (2007ல் 'டுவென்டி-20', 2011ல் 50 ஓவர் மற்றும் 2013ல் சாம்பியன்ஸ் டிராபி) உலக கோப்பை பெற்றுத் தந்தார். 

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...