பள்ளி மாணவிகள் மாயமான விவகாரம்: முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து தேர்வு எழுத மாணவிகளுக்கு அனுமதி



கோவை துடியலூரை அடுத்த நல்லாம்பாளையம் பகுதியில் அமிர்தா வித்யாலயா என்ற தனியாருக்கு சொந்தமான பள்ளி இயங்கி வருகிறது. 

இந்த பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் இரு சிறுமிகள் கடந்த 15-ம் தேதி மாயமாகினர். இது குறித்து, மாணவியின் பெற்றோர் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் செய்ததுடன், பள்ளி சென்ற மாணவிகள் மாயமானதற்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பு என்று கூறி முற்றுகை போராட்டம் நடத்தினர்.

தொடர்ந்து, மாணவிகள் இருவரும் கோழிக்கோடு ரயில் நிலையத்தில் இருப்பதாக கோவை மாநகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் மாணவிகள் இருவரையும் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 

இந்த நிலையில், இன்று பள்ளிக்கு சென்ற இரு மாணவிகளையும் தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என்று பள்ளி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், முறையான கவுன்சிலிங் பெற்ற பின்னரே மாணவிகளை தேர்வு எழுத அனுமதிக்க முடியும் என்றும் பள்ளி நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.

பள்ளி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையால் மாணவிகளின் படிப்பு பாதிக்கும் என்று கூறியும், உடனடியாக தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்றும் மாணவிகளின் பெற்றோர் பள்ளி வாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தற்போது அமிர்தா வித்யாலயா பள்ளி அருகே பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து, முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டதன் பேரில் மாணவியை தேர்வு எழுத பள்ளி நிர்வாகம் தற்போது அனுமதி வழங்கியுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...