தகுதிநீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதியில் தேர்தல் வைத்தால் அதிமுக வெற்றிபெருவது சிரமம்- சூலூர் சட்டமன்ற உறுப்பினர்


18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்தது வருத்தமளிப்பதாகவும், இந்த 18 தொகுதிக்கு இடைத்தேர்தல் வைத்தால் அனைத்திலும் அதிமுக வெற்றி பெறுவது சிரமம் என சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

கோவை காமநாயக்கன்பாளையம் பகுதியில் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

"அதிமுக ஆட்சியைக் காப்பாற்றியவர்களை தகுதி நீக்கம் செய்தது வருத்தமளிக்கிறது. இந்த தகுதி நீக்கம் அதிமுக-விற்கு பலவீனமாக இருப்பது மட்டுமல்லாமல் அத்தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வைத்தால் அதிமுக வெற்றி பெறுவது சிரமம்.

பதவி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு பலமுறை சபாநாயகர் எச்சரித்தும் அவர்கள் கேட்கவில்லை. அதற்கான தண்டனை தான் இது. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக பாஜக-வுடன் கூட்டணி வைக்க வேண்டும். திமுகவுடன் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து இருப்பதால் கூட்டணி வைத்தால் தான் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சிறப்பான வெற்றி பெற முடியும். 

ஏற்கனவே தினகரனுக்கு ஆதரவாக தான் பேசிவந்தேன். ஆனால் அவரது நடவடிக்கை திமுக-விற்கு சாதகமாக இருந்ததால் அவர் மீது வைத்த நம்பிக்கை போய்விட்டது. தினகரன் அணியில் இணைந்தால் அமைச்சர் பதவி தருவதாக அவரது அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாகராஜ் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான திருப்பூர் சிவசாமி உள்ளிட்டோர் தன்னிடம் பேசினர். ஆனால் தான் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை"

இவ்வாறு சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் தெரிவித்தார்.

Newsletter

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...