மாநகராட்சி விதித்த புதிய வரிவிதிப்பினை கண்டித்து அனைத்துக் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை மாநகராட்சியில் புதிதாக குப்பை வரி மற்றும் குடிநீர் டெபாசிட் கட்டணம் விதிப்பு போன்றவை உயர்த்தப்பட்டது. இந்த புதிய வரி விதிப்புகளை கண்டித்து திமுக, காங்கிரஸ், மதிமுக, சி.பி.ஐ, சி.பி.எம், விடுதலை சிறுத்தைகள் , கொ.ம.தே.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இதன் ஓருபகுதியாக அனைத்து கட்சிகள் சார்பில் கோவை மாநகராட்சி முழுவதும் 100 வாட்டுகளில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிங்காநல்லூர் தி.மு.க., சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது மாநகராட்சி விதித்துள்ள புதிய வரிகளை திரும்ப பெற வேண்டும் எனவும், அதுவரை தொடர் போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.



மேலும், அடுத்தகட்டமாக கோவை மாநகராட்சியை 8 கட்டமாக முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்த இருப்பதாகவும், அதனை தொடர்ந்து, புதிய வரி விதிப்பு முறைகளை கைவிடும் வரை தொடர் போராட்டம் நடைபெறும் என தி.மு.க., எம்.எல்.ஏ. கார்த்திக் தெரிவித்தார். இதனை தொடந்து போராட்டத்தில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 

இதேபோல, டவுன்ஹால் பகுதியில் தி.மு.க., இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் அப்பாஸ் தலைமையில் ஊர்வலமாக வந்து மறியலில் ஈடுபட்ட 47 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இதே போன்று மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் போராட்டம் நடத்திய அனைத்துக் கட்சிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...