மாநகராட்சி ஆணையர் தலைமையில் மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்கள் மீட்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன், உத்தரவின் பேரில் கோயம்புத்தூர் மாநகராட்சி பீளமேடு வார்டு எண்.56 பகுதியில் மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்கள் மீட்கப்பட்டு, சுத்தம் செய்து மாநகராட்சியின் பெயர் பலகை வைக்கப்பட்டது.

கடந்த 2010-ம் ஆண்டு அவினாசி சாலை மற்றும் திருச்சி சாலையை இணைக்கும் திட்டசாலை அமைக்கும் பொழுது, சாலையோர ஆக்கிரமிப்புதாரர்கள், பீளமேடு வார்டு எண்.56 கல்லூரி நகருக்கு சொந்தமான பொது ஒதுக்கீடு இடத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டனர். தற்போது இவர்களுக்கு தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் மூலம் வெள்ளலூரில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மேற்படி ஆக்கிரமிப்புதாரர்களை அகற்றும் பணி நடைபெற்றது. 

குடிசைகள் மற்றும் தற்காலிக வீடுகளுக்கு உண்டான மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, அனைத்து தற்காலிக வீடுகளும் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன. இதன் மூலம் ஆக்கிரமிக்கப்பட்ட 86 சென்ட் பரப்பிலான மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்கள் (சுமார் 17.20 கோடி மதிப்பு) மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அலுவலர்களால் மீட்கப்பட்டு மாநகராட்சியின் பெயர் பலகை வைக்கப்பட்டது.

அதேபோல், மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வீரகேரளம், வார்டு எண்.18, கொங்கு நகர் பகுதியில் உள்ள 26.5 சென்ட் பரப்பும், கொங்கு நகர் பகுதியில் 13.3 சென்ட் பரப்பும், தெற்கு மண்டலத்திற்குட்பட்ட குனியமுத்தூர் வார்டு எண்.93, ராஜு நகர் பகுதியில் உள்ள 30 சென்ட் பரப்பும், ஆகமொத்தம் 69.8 சென்ட் பரப்பிலான மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்கள் மீட்கப்பட்டு, சுத்தம் செய்து மாநகராட்சியின் பெயர் பலகை வைக்கப்பட்டது.

மேலும், மாநகராட்சியின் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவில் அமையும் ஆக்கிரமிக்கப்பட்ட பொது ஒதுக்கீடு இடங்கள் சம்பந்தமாக, உரிய ஆய்வு செய்து தொடர்ந்து நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717...

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...