கோவையில் அரசுப் போட்டித் தேர்வு நடக்கும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கோவை மாவட்டத்தில் இன்று (16.09.2017) ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் பல்தொழில்நுட்ப கல்லூரிகளுக்கான விரிவுரையாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு நடைபெற்றது.

இந்த மையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவர் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் பல்வேறு போட்டித்தேர்வுகளின் அடிப்படையில் பள்ளி மற்றும் பல்தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்து வருகின்றது. 



அதன்படி, இன்று அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு கோவை மாவட்டத்தில் 38 மையங்களில் காலை ஒருபகுதியில் மட்டும் தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வில் 13,849 நபர்கள் தேர்வெழுத விண்ணப்பித்திருந்தனர். இதில், 3,518 நபர்கள் தேர்வெழுதவில்லை, இத்தேர்வினை கண்காணிக்க 38 முதன்மை கண்காணிப்பாளர்களும், 38 கூடுதல் கண்கானிப்பாளர்களும், 9 பறக்கும் படையைச் சேர்ந்த அலுவலர்களும் பணியாற்றுகின்றனர். மேலும், இத்தேர்விற்கென பல்வேறு நிலையிலுள்ள 1621 அலுவலர்கள் பணியாற்றுகின்றனர்.

இத்தேர்விற்கான ஏற்பாடுகள் முன்னரே அனைத்து அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டது. கோவை மாவட்டத்தில் அனைத்து மையங்களிலும் சிறப்பாக தேர்வுகள் நடைபெற்றது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கூறினார். 

இந்த ஆய்வின் போது முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, தேர்வு கண்கானிப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...