நடிகர் விஷாலின் சவாலில் வெற்றிபெற்ற தமிழ்கன் இணையதளம்

புதிய திரைப்படங்களை இணையதளங்களில் வெளியிட்டு வந்த தமிழ்கன் இணையதளத்தின் அட்மின் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது விஷால் நடிப்பில் உருவாகியுள்ள துப்பறிவாளன் திரைப்படம் இணைதளத்தில் வெளியாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த துப்பறிவாளன் படம் நேற்று(14.09.2017) வெளியானது. இந்தப் படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் மூலம் அவரே தயாரித்துள்ளார். இந்த நிலையில், நடிகர் சங்க செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் உள்ள விஷால் திருட்டு வீடியோவை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். 

இருப்பினும், புதிதாக படம் திரைக்கு வரும் படங்ளை, அன்றைய தினமே சட்டவிரோதமாக தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ்கன் ஆகிய இணையதளங்களில் வெளியிட்டு திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.  இந்த இணையதளத்தில் அட்மினாக செயல்படுபவர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுப்பேன். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என விஷால் கூறியிருந்தார். 

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் தமிழ்கன் இணையத்தின் அட்மின் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால், அப்பாவிகளை கைது செய்ய வேண்டாம். எந்த அட்மினும் கைது செய்யப்படவில்லை. உங்களால் முடிந்தால் துப்பறிவாளன் படத்தை காப்பாற்றிக் கொள்ளுங்கள் என தமிழ்கன் இணையம் வெளிப்படையாக சவால் விட்டது. 

இதையடுத்து. நேற்று வெளியான துப்பறிவாளன் படத்தை பைரசி கும்பலிடம் இருந்து காப்பாற்ற மாவட்டம் தோறும் விஷால் தனது ஆதரவாளர்களைப் பறக்கும் படையினராக நியமித்து திரையரங்குகளைக் கண்காணித்தார். 

இந்த நிலையில், துப்பறிவாளன் திரைப்படம் தமிழ்கன் இணையதளத்திலேயே வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், வெளியிடப்பட்ட அந்த படத்தை இதுவரை 60,000-க்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இதன் மூலம் அதிரடி மன்னன் விஷாலிடம், தமிழ்கன், தமிழ் ராக்கர்ஸ் இணையதளங்கள் வெற்றி பெற்றுள்ளன. 

நடிகர் விஷாலின் சவாலில் வெற்றிபெற்ற தமிழ்கன் இணையதளம் 

புதிய திரைப்படங்களை இணையதளங்களில் வெளியிட்டு வந்த தமிழ்கன் இணையதளத்தின் அட்மின் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது விஷால் நடிப்பில் உருவாகியுள்ள துப்பறிவாளன் திரைப்படம் இணைதளத்தில் வெளியாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த துப்பறிவாளன் படம் நேற்று(14.09.2017) வெளியானது. இந்தப் படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் மூலம் அவரே தயாரித்துள்ளார். இந்த நிலையில், நடிகர் சங்க செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் உள்ள விஷால் திருட்டு வீடியோவை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். 

இருப்பினும், சட்டவிரோதமாக தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ்கன் ஆகிய இணையதளங்களில், புதிதாக படம் திரைக்கு வரும் போது, அன்றைய தினமே வெளியிட்டு திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.  இந்த இணையதளத்தில் அட்மினாக செயல்படுபவர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுப்பேன். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என விஷால் கூறியிருந்தார். 

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் தமிழ்கன் இணையத்தின் அட்மின் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால், அப்பாவிகளை கைது செய்ய வேண்டாம். எந்த அட்மினும் கைது செய்யப்படவில்லை. உங்களால் முடிந்தால் துப்பறிவாளன் படத்தை காப்பாற்றிக் கொள்ளுங்கள் என தமிழ்கன் இணையம் வெளிப்படையாக சவால் விட்டது.

இதையடுத்து. நேற்று வெளியான துப்பறிவாளன் படத்தை பைரசி கும்பலிடம் இருந்து காப்பாற்ற மாவட்டம் தோறும் விஷால் தனது ஆதரவாளர்களைப் பறக்கும் படையினராக நியமித்து திரையரங்குகளைக் கண்காணித்தார். 

இந்த நிலையில், துப்பறிவாளன் திரைப்படம் தமிழ்கன் இணையதளத்திலேயே வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், வெளியிடப்பட்ட அந்த படத்தை இதுவரை 60,000-க்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இதன் மூலம் அதிரடி மன்னன் விஷாலிடம், தமிழ்கன், தமிழ் ராக்கர்ஸ் இணையதளங்கள் வெற்றி பெற்றுள்ளன. 

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...