இங்கிலாந்து ராணியிடம் வாழ்த்து பெற்ற கோவை சிறுமி


தனது தொடர் சாதனைகளுக்காக இங்கிலாந்து ராணியிடம் கோவையை சேர்ந்த சிறுமி வாழ்த்து பெற்றுள்ளார் கோவையை சேர்ந்த 8 வயது சிறுமி தர்ஷினி. கோவை பி.என்.புதூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன், இவரது மகள் தர்ஷினி, கணுவாய் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். 

ஸ்கேட்டிங் விளையாட்டில் பலே கில்லாடியான இவர் பல்வேறு விருதுகளை வாங்கி குவித்துள்ளார். 



மேலும், 41 நிமிடங்களில் 10.5 கி.மீ தூரம் ஸ்கேட்டிங் செய்து "ஆசியா சாதனையாளர்கள் புத்தகம்"(Asia book of records) புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

இந்த சாதனையை தொடர்ந்து, கடந்த ஆண்டுக்கான ‘பிரைட் ஆப் தமிழ்நாடு’ விருதினை பெற்றுள்ளார். ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று தங்கப்பதக்கம் பெற வேண்டும் என்பது இந்த சாதனைச் சுட்டியின் எதிர்கால லட்சியமாக உள்ளது. 

தர்ஷினியின் சாதனைகளை செய்தித்தொகுப்பாக சிம்ப்ளிசிட்டி கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், தனது சாதனைகளை ஒரு கடிதம் மூலம் இங்கிலாந்து மகாராணிக்கு அனுப்பியுள்ளார் தர்ஷினி. 



இதைப்பார்த்த ராணி, தர்ஷினியின் சாதனைகளை பாராட்டி வாழ்த்துக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் தனது கையொப்பமிட்டதுடன் தனது இரு புகைப்படங்களையும் தர்ஷினிக்கு பரிசாக அனுப்பியுள்ளார்.





Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...