வீட்டு வசதி வாரிய வீடுகள் பெற வட்டிக்கு மேல் வட்டி வசூலிக்கும் அதிகாரிகள் - மாவட்ட ஆட்சியரிடம் புகார்

வீட்டு வசதி வாரியத்தால் ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு பணம் கட்டியும் தற்போது வரை பத்திரம் கொடுக்காமல் உச்சநீதிமன்ற உத்தரவை மீறி வட்டிக்குமேல் வட்டி வசூலிக்கும் அதிகாரிகளைக் கண்டித்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒருங்கிணைப்பு ஒதுக்கீட்டாளர்கள் நலச்சங்கத்தின் சார்பாக வாயில் கருப்பு துணிகட்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை மாவட்டம் கணபதி மாநகர் மற்றும் உப்பிலிபாளையம் உட்பட பல பகுதிகளில் 7000-க்கும் மேற்பட்டவர்களுக்கு வீட்டு வசதி வாரியத்தால் 1991- 1992 ஆம் ஆண்டுகளில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதேப்போல தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை தமிழகம் முழுவதும் 37,000 வீடுகளுக்கு பத்திரம் வழங்கப்படால் இழுத்தடிக்கப்படுகிறது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடுகளுக்கு பயனாளிகள் அப்போதே முழுத்தொகையை கொடுத்தும் இதுவரை பத்திரம் வழங்கப்படவில்லை. இந்நிலையில் வீட்டு வசதி வாரியத்திற்கு நிலம் அளித்தவர் அதிக தொகை கேட்டு வழக்கு தொடர்ந்ததையடுத்து அவருக்கு பணம் கொடுக்க பயனாளிகளிடம் அதிக தொகை கேட்டுள்ளனர்.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் பயனாளிகள் வழக்கு தொடர்ந்ததில் 6000 ரூபாய் சென்ட்க்கு கட்டினால் போதும் என்று தீர்ப்பு கூறியது. இந்த தொகையை கட்ட பயனாளிகள் தயாராக இருந்தும் வீட்டு வசதி வாரியம் சென்ட்டுக்கு இரண்டு முதல் மூன்று லட்சம் ரூபாய் கேட்பதாகவும், 1995 லிருந்து 2001 வரை இதற்கான வட்டியை கட்ட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. 

அப்போதையை முதலமைச்சர் ஜெயலலிதா, வருடத்திற்கு ஐந்து மாதம் கழித்துவிட்டு மீதி வட்டியை கட்ட ஆணை பிறப்பித்தார். உச்ச நீதிமன்றம் மற்றும் மாநில அரசு அளித்த தீர்ப்பை நிறைவேற்றாமல் வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் 25 ஆண்டுகளுக்கு பணம் கட்டுமாறு வற்புறுத்துவதாக குற்றம் சாட்டினார்.

மேலும், வட்டிக்கு மேல் வட்டி போட்டு பயனாளிகளை துன்புறுத்துவதாகவும், 1992 ஆம் ஆண்டு வீடு வாங்கியவர்கள் பாதிபேர் இறந்து விட்டதாகவும், 25 ஆண்டுகளாக இன்னும் பட்டா கிடைக்கவில்லை என்பதால் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி வாயில் கருப்புதுணி கட்டி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒருங்கிணைப்பு ஒதுக்கீட்டு சங்கத்தின் சார்பாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இன்று மனு அளித்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...