கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை ஒன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Coimbatore: மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில்

தும்பிக்கை கருகிய நிலையில் தீக்காயங்களுடன் ஆண் யானை கண்டெடுக்கப்பட்டதால், அப்பகுதியில் உள்ள மின் கட்டமைப்புகளின் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

இன்று காலை சுமார் 8.40 மணியளவில், போளுவாம்பட்டி பிளாக்–1 காப்பு வன எல்லைக்கு அருகே உள்ள வென்னல் பெருமாள் கோவில் சரக மாந்தோட்டத்தில் யானை உயிரிழந்த நிலையில் கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் இறந்த யானையை மீட்டு முதற்கட்ட ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வில், யானையின் தும்பிக்கையில் பலத்த தீக்காயங்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டது. அப்பகுதியில் இருந்த உயரழுத்த மின்மாற்றி அல்லது தாழ்வாகச் சென்ற மின்கம்பியை யானை தொட்டபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக வனத்துறை உயரதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாந்தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்மாற்றியில் தொழில்நுட்ப கோளாறு இருந்ததா, அல்லது விதிமுறைகளை மீறி மின் இணைப்புகள் அமைக்கப்பட்டிருந்ததா என்பது குறித்து தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

மின்வாரிய அலட்சியம் அல்லது தோட்ட உரிமையாளரின் விதிமுறை மீறல் உறுதி செய்யப்பட்டால், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972-ன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

வனப்பகுதிகளை ஒட்டியுள்ள நிலங்களில் பாதுகாப்பற்ற மின்வேலிகள் மற்றும் தாழ்வாகத் தொங்கும் மின்கம்பிகள் காரணமாக யானைகள் அடிக்கடி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்வது கவலை அளிப்பதாக வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.


Newsletter

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...

மசக்காளிபாளையம் நகராட்சிப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் முதலிடம்

கோயம்புத்தூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஒற்றையர் மற்று...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் பொள்ளாச்சி பிரதான சாலையில் முட்புதர் அகற்றும் பணி

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 98ல் பொள்ளாச்சி பிரதான சாலை எல்ஐசி காலனி பகுதியில் சாலையோர செடிகள் மற்றும் முட...

கோவை ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி – உயிர் அமைப்பு இடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலுப்படுத்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மற்றும் உயிர் அமைப்பு இடையே புரிந்துண...