கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை ஒன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Coimbatore: மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில்

தும்பிக்கை கருகிய நிலையில் தீக்காயங்களுடன் ஆண் யானை கண்டெடுக்கப்பட்டதால், அப்பகுதியில் உள்ள மின் கட்டமைப்புகளின் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

இன்று காலை சுமார் 8.40 மணியளவில், போளுவாம்பட்டி பிளாக்–1 காப்பு வன எல்லைக்கு அருகே உள்ள வென்னல் பெருமாள் கோவில் சரக மாந்தோட்டத்தில் யானை உயிரிழந்த நிலையில் கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் இறந்த யானையை மீட்டு முதற்கட்ட ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வில், யானையின் தும்பிக்கையில் பலத்த தீக்காயங்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டது. அப்பகுதியில் இருந்த உயரழுத்த மின்மாற்றி அல்லது தாழ்வாகச் சென்ற மின்கம்பியை யானை தொட்டபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக வனத்துறை உயரதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாந்தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்மாற்றியில் தொழில்நுட்ப கோளாறு இருந்ததா, அல்லது விதிமுறைகளை மீறி மின் இணைப்புகள் அமைக்கப்பட்டிருந்ததா என்பது குறித்து தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

மின்வாரிய அலட்சியம் அல்லது தோட்ட உரிமையாளரின் விதிமுறை மீறல் உறுதி செய்யப்பட்டால், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972-ன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

வனப்பகுதிகளை ஒட்டியுள்ள நிலங்களில் பாதுகாப்பற்ற மின்வேலிகள் மற்றும் தாழ்வாகத் தொங்கும் மின்கம்பிகள் காரணமாக யானைகள் அடிக்கடி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்வது கவலை அளிப்பதாக வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.


Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...