வீட்டு வசதி வாரிய வீடுகள் பெற வட்டிக்கு மேல் வட்டி வசூலிக்கும் அதிகாரிகள் - மாவட்ட ஆட்சியரிடம் புகார்

வீட்டு வசதி வாரியத்தால் ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு பணம் கட்டியும் தற்போது வரை பத்திரம் கொடுக்காமல் உச்சநீதிமன்ற உத்தரவை மீறி வட்டிக்குமேல் வட்டி வசூலிக்கும் அதிகாரிகளைக் கண்டித்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒருங்கிணைப்பு ஒதுக்கீட்டாளர்கள் நலச்சங்கத்தின் சார்பாக வாயில் கருப்பு துணிகட்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை மாவட்டம் கணபதி மாநகர் மற்றும் உப்பிலிபாளையம் உட்பட பல பகுதிகளில் 7000-க்கும் மேற்பட்டவர்களுக்கு வீட்டு வசதி வாரியத்தால் 1991- 1992 ஆம் ஆண்டுகளில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதேப்போல தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை தமிழகம் முழுவதும் 37,000 வீடுகளுக்கு பத்திரம் வழங்கப்படால் இழுத்தடிக்கப்படுகிறது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடுகளுக்கு பயனாளிகள் அப்போதே முழுத்தொகையை கொடுத்தும் இதுவரை பத்திரம் வழங்கப்படவில்லை. இந்நிலையில் வீட்டு வசதி வாரியத்திற்கு நிலம் அளித்தவர் அதிக தொகை கேட்டு வழக்கு தொடர்ந்ததையடுத்து அவருக்கு பணம் கொடுக்க பயனாளிகளிடம் அதிக தொகை கேட்டுள்ளனர்.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் பயனாளிகள் வழக்கு தொடர்ந்ததில் 6000 ரூபாய் சென்ட்க்கு கட்டினால் போதும் என்று தீர்ப்பு கூறியது. இந்த தொகையை கட்ட பயனாளிகள் தயாராக இருந்தும் வீட்டு வசதி வாரியம் சென்ட்டுக்கு இரண்டு முதல் மூன்று லட்சம் ரூபாய் கேட்பதாகவும், 1995 லிருந்து 2001 வரை இதற்கான வட்டியை கட்ட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. 

அப்போதையை முதலமைச்சர் ஜெயலலிதா, வருடத்திற்கு ஐந்து மாதம் கழித்துவிட்டு மீதி வட்டியை கட்ட ஆணை பிறப்பித்தார். உச்ச நீதிமன்றம் மற்றும் மாநில அரசு அளித்த தீர்ப்பை நிறைவேற்றாமல் வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் 25 ஆண்டுகளுக்கு பணம் கட்டுமாறு வற்புறுத்துவதாக குற்றம் சாட்டினார்.

மேலும், வட்டிக்கு மேல் வட்டி போட்டு பயனாளிகளை துன்புறுத்துவதாகவும், 1992 ஆம் ஆண்டு வீடு வாங்கியவர்கள் பாதிபேர் இறந்து விட்டதாகவும், 25 ஆண்டுகளாக இன்னும் பட்டா கிடைக்கவில்லை என்பதால் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி வாயில் கருப்புதுணி கட்டி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒருங்கிணைப்பு ஒதுக்கீட்டு சங்கத்தின் சார்பாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இன்று மனு அளித்தனர்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...