மியான்மரில் முஸ்லீம் இனப்படுகொலையை கண்டித்து கோவை வடக்கு தமுமுகவினர் ஆர்ப்பாட்டம்.

மியான்மரில் தொடர்ந்து நடைபெற்று வரும் முஸ்லீம் இனப்படுகொலையை கண்டித்து கோவை வடக்கு தமுமுகவினர் கோவை தெற்கு தாலுக்கா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோவை வடக்கு மாவட்ட தமுமுக பொருளாளர் காதர் உசேன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மமக மாநில கொள்கை பரப்பு செயலாளர் கோவை செய்யது கலந்து கொண்டு மியான்மர் அரசிக்கெதிராகவும், புத்த பயங்கரவாதிகள் மற்றும் இராணுவத்திற்கெதிராகவும் கண்டன உரையாற்றினார்.



பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர்; மியான்மர் (பர்மா) நாட்டில் ரோஹிங்கிய பகுதியில் கி.பி 1784ம் ஆண்டு முதல் வாழ்ந்து வரும் முஸ்லீம்களை பாசிச வெறியர்கள் கொலை செய்வதும், அவர்களின் வீட்டுகளை தீவைத்து எரித்தும் கொடூரமான மனித உரிமை மீறலில் ஈடுபட்டு வருகிறது. இதனை அந்நாட்டு அரசும், காவல்துறையும் வேடிக்கை பார்த்து வருகிறது. அதேபோல உலக நாடுகளும் இனப்படுகொலை குறித்து மெளனம் காத்து வருகிறது.

சர்வதேச பொது மன்னிப்பு நிறுவனமான அம்னெஸ்டி இன்டர்நேசனலின் தென் கிழக்கு ஆசிய இயக்குநர் ரபின்டி ஜாமீன் தனது அறிக்கையில் திட்டமிட்டு ரோஹிங்கிய முஸ்லிம்கள் குறிவைத்து  தாக்கப்பட்டுதாக குறிப்பிட்டுள்ளார். அதேபோல் ஐ.நா சபையின் மனிதஉரிமை நிறுவனம், சர்வதேச மக்கள் கண்காணிப்பகம் போன்ற அமைப்புகள் இந்த படுபாதக செயல்களை கண்டித்து வருகின்றன.

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சாங் சூகியின் தேசிய ஜனநாயக லீக் கட்சியின் ஆட்சியில் இதுபோன்ற இனப்படுகொலைகள் நடந்து வருவது வெட்கக்கேடாகும்.

மியான்மரில் வாழும் சிறுபான்மை முஸ்லீம் மக்களை ஓரங்கட்ட ஆங் சாங் சூகி மும்முரமாக செயல்பட்டு வருகிறார். என்பதையே இதுபோன்ற இனப்படுகொலைகள் வெட்டவெளிச்சமாக காட்டுகின்றனர். மியான்மரில் முஸ்லீம்கள் மீது கட்டவீழ்ந்துவிடப்படும் அத்துமீறல்களையும், உயிர் வாழும் அடிப்படை உரிமையையும் பறிக்கும் பௌத்த அடிப்படைவாத பயங்கரவாதிகளின் தாக்குதல்களையும் இனியும் உலக நாடுகள் வேடிக்கைப் பார்க்கக் கூடாது என்றார். தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மியான்மர் அதிபரின் உருவ பொம்மையை தமுமுக வினர் தீயிட்டு எரித்தனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் தமுமுக வின் கோவை மாவட்ட வடக்கு செயலாளர் இப்ராஹிம், பொருளாளர் காதர் உசேன், மமக மாவட்ட செயலாளர் ஜெம் பாபு, பொருளாளர் ஜபார் சாதிக்,  துணை செயலாளர்கள் சிங்கை சாகுல், சிராஜ்தீன், இப்ராஹிம், அப்துல் கரீம், பசீர், மைதீன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர். இதில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...