மியான்மரில் முஸ்லீம் இனப்படுகொலையை கண்டித்து கோவை வடக்கு தமுமுகவினர் ஆர்ப்பாட்டம்.

மியான்மரில் தொடர்ந்து நடைபெற்று வரும் முஸ்லீம் இனப்படுகொலையை கண்டித்து கோவை வடக்கு தமுமுகவினர் கோவை தெற்கு தாலுக்கா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோவை வடக்கு மாவட்ட தமுமுக பொருளாளர் காதர் உசேன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மமக மாநில கொள்கை பரப்பு செயலாளர் கோவை செய்யது கலந்து கொண்டு மியான்மர் அரசிக்கெதிராகவும், புத்த பயங்கரவாதிகள் மற்றும் இராணுவத்திற்கெதிராகவும் கண்டன உரையாற்றினார்.



பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர்; மியான்மர் (பர்மா) நாட்டில் ரோஹிங்கிய பகுதியில் கி.பி 1784ம் ஆண்டு முதல் வாழ்ந்து வரும் முஸ்லீம்களை பாசிச வெறியர்கள் கொலை செய்வதும், அவர்களின் வீட்டுகளை தீவைத்து எரித்தும் கொடூரமான மனித உரிமை மீறலில் ஈடுபட்டு வருகிறது. இதனை அந்நாட்டு அரசும், காவல்துறையும் வேடிக்கை பார்த்து வருகிறது. அதேபோல உலக நாடுகளும் இனப்படுகொலை குறித்து மெளனம் காத்து வருகிறது.

சர்வதேச பொது மன்னிப்பு நிறுவனமான அம்னெஸ்டி இன்டர்நேசனலின் தென் கிழக்கு ஆசிய இயக்குநர் ரபின்டி ஜாமீன் தனது அறிக்கையில் திட்டமிட்டு ரோஹிங்கிய முஸ்லிம்கள் குறிவைத்து  தாக்கப்பட்டுதாக குறிப்பிட்டுள்ளார். அதேபோல் ஐ.நா சபையின் மனிதஉரிமை நிறுவனம், சர்வதேச மக்கள் கண்காணிப்பகம் போன்ற அமைப்புகள் இந்த படுபாதக செயல்களை கண்டித்து வருகின்றன.

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சாங் சூகியின் தேசிய ஜனநாயக லீக் கட்சியின் ஆட்சியில் இதுபோன்ற இனப்படுகொலைகள் நடந்து வருவது வெட்கக்கேடாகும்.

மியான்மரில் வாழும் சிறுபான்மை முஸ்லீம் மக்களை ஓரங்கட்ட ஆங் சாங் சூகி மும்முரமாக செயல்பட்டு வருகிறார். என்பதையே இதுபோன்ற இனப்படுகொலைகள் வெட்டவெளிச்சமாக காட்டுகின்றனர். மியான்மரில் முஸ்லீம்கள் மீது கட்டவீழ்ந்துவிடப்படும் அத்துமீறல்களையும், உயிர் வாழும் அடிப்படை உரிமையையும் பறிக்கும் பௌத்த அடிப்படைவாத பயங்கரவாதிகளின் தாக்குதல்களையும் இனியும் உலக நாடுகள் வேடிக்கைப் பார்க்கக் கூடாது என்றார். தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மியான்மர் அதிபரின் உருவ பொம்மையை தமுமுக வினர் தீயிட்டு எரித்தனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் தமுமுக வின் கோவை மாவட்ட வடக்கு செயலாளர் இப்ராஹிம், பொருளாளர் காதர் உசேன், மமக மாவட்ட செயலாளர் ஜெம் பாபு, பொருளாளர் ஜபார் சாதிக்,  துணை செயலாளர்கள் சிங்கை சாகுல், சிராஜ்தீன், இப்ராஹிம், அப்துல் கரீம், பசீர், மைதீன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர். இதில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...