கோவையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியின் வீட்டை முற்றுகையிட்ட வெல்ஃபேர் பார்ட்டி அமைப்பினர்

வலுக்கட்டாயமாக நீட் தேர்வை தினிக்கும் மத்திய அரசையும், அதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் மாநில அரசையும் கண்டித்து வெல்ஃபேர் பார்ட்டி அமைப்பின் சார்பில் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, இன்று நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக் கோரியும், மாணவி அனிதாவின் தற்கொலையை கொச்சையாகவும், தமிழின துரோக கருத்துக்களை வெளியிட்டு வரும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியை கண்டித்தும் கோவை, குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணசாமியின் வீட்டை வெல்ஃபேர் பார்ட்டி மற்றும் பிரட்டர்னிட்டி இயக்கம் இணைந்து பேரணியாக சென்று போராட்டம் நடத்தினர்.



அப்போது, வெல்ஃபேர் பார்ட்டி மாநில பொது செயலாளர் முகமது காசிம் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாட்டில் நீட் தேர்வை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் மாணவர்களை கண்டு கொள்ளாத மத்திய, மாநில அரசினால் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். அவரின் மரணத்தை பற்றி கொச்சையாகவும், தமிழின துரோக கருத்துக்களை வெளியிட்டு வரும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மன்னிப்பு கேட்கும் வகையில் வெல்ஃபேர் பார்ட்டி மற்றும் பிரட்டர்னிட்டி இயக்கம் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும். 



இந்த நீட் தேர்வு தமிழகத்தில் அனுமதிக்கப்பட்டால் காலப்போக்கில் சுகாதாரம் என்பது முற்றிலும் அளிக்கப்படும். ஏழைகளுக்கான மருத்துவம் என்பது கேள்விக்குரியாகிவிடும். மேலும், கல்வியை பொது பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும். அப்போதுதான் மத்திய அரசின் தலையீடு மாநிலங்களில் இல்லாமல் இருக்கும். தமிழக அரசு உடனடியாக அவசர சட்டத்தை நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும். குடியரசுத் தலைவர் இதற்கு உடனடியாக ஒப்புதல் அளித்து இந்த நீட் தேர்வில் இருந்து நிரந்தரமாக விலக்கை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்பதே வெல்ஃபேர் பார்ட்டி மற்றும் பிரட்டர்னிட்டி இயக்கத்தின் முக்கிய நோக்கம்' என்றார்.



இந்த போராட்டத்தில், எப்.ஐ.டி.யு மாநிலத் தலைவர் கோவை இப்ராஹிம், வெல்ஃபேர் பார்ட்டி மாவட்ட தலைவர் இ.எம்.எஸ், துணைத் தலைவர் ஷாஜஹான், பொருளாளர் முஜிப், எஸ்.ஐ.ஒ மாவட்டத் தலைவர் ஷபீர், வெல்ஃபேர் பார்ட்டி இணைச் செயலாளர் பீர் முகமது மற்றும் பெண்கள் அணியினர் என ஏராளமானோர் கலந்து கொண்டு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியின் வீட்டை முற்றுகையிட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் 45 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...