ஆதரவற்ற குழந்தைகளின் வாழ்த்துக்களோடு கோவையில் நடந்த திருமணம்



கோவையில் நடைபெற்ற திருமனத்தின் போது ஆதரவற்ற குழந்தைகள் திருமண தம்பதியினரை மனமார வாழ்த்தியது அனைவரது மனதையும் நெகிழ வைத்தது.

கோவை கருமத்தம்பட்டியில் வசித்து வரும் சுப்ரமணியம் பிரபாவதி தம்பதியினரின் மகன் அரவிந்த். திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த விஷ்வநாதன் மணிமேகலை தம்பதியினரின் மகள் சாதனாவிற்கும் அரவிந்திற்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்று அவர்களது திருமணம் சோமனூரை அடுத்து கருமத்தம்பட்டி செல்லும் சாலையில் அமைந்துள்ள கொங்கு கலையரங்கத்தில் கடந்த 2-ம் தேதி நடைபெற்றது.

இவர்களது திருமண நிகழ்ச்சிக்கு சோமனூரை அடுத்து நல்லா கவுண்டம்பாளையத்தில் உள்ள பிரபஞ்ச சேவா அமைதி மையத்தில் இருந்து 135 குழந்தைகளுக்கு அழைப்பிதழ் கொடுக்கபட்டு, அவர்கள் அனைவரும் பேருந்து மூலம் திருமண மண்டபதிற்கு அழைத்து வரப்பட்டனர்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது, குழந்தைகள் அனைவரும் மணமேடையில் மணமக்களை ஒருமித்த குரலில் வாழ்த்தியதும் தங்கள் இல்லத்திருமணம் போல துள்ளிக்குதித்து ஓடியது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. பின்னர், அந்த குழந்தைகள் திருமண தம்பதியினரை மனமார வாழ்த்தியது அனைவரது மனதையும் நெகிழ வைத்தது.

இது குறித்து மணமகனின் தந்தை சுப்ரமணியம் கூறுகையில், வருடத்தில் நான்கு, ஐந்து முறை ஆதரவற்றோர் மையத்திற்கு குடும்பத்துடன் சென்று வருகிறேன். மகன்களின் பிறந்த நாளின் போது குழந்தைகள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். மற்ற பண்டிகை நாட்களில் அங்கு செல்லும் போது தன்னால் முடிந்ததை செய்து வருகிறேன்.

தனது மகனின் திருமணத்தையும் ஆதரவற்ற குழந்தைகளின் முன்னிலையில் நடத்த முடிவு செய்து, குடும்பத்தினரின் முழு ஒத்துழைப்புடன் இரு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு குழந்தைகள் அழைத்து வரப்பட்டனர்" என்றார்.

தொடர்ந்து, ஆதரவற்ற குழந்தைகளை தங்கள் சொந்தமாகக் கருதி விழா முடிந்த பிறகு அவர்களை பத்திரமாக அவர்கள் இருப்பிடத்திற்கு அனுப்பி வைத்தனர் திருமண வீட்டினர்.

இன்றைய சூழலில் உறவினர்கள் அல்லது நண்பர்களின் திருமணதிற்கு வருபவர்கள் பல்வேறு கல்யாண அழைப்புகளை கையில் வைத்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தக்கூட நேரமில்லாமல், பந்தியில் பெயரளவிற்கு அமர்ந்துவிட்டு உணவை வீணடித்துச் செல்லும் நிலையில், ஆதரவற்ற குழந்தைகளை அழைத்து அறுசுவை உணவளித்து அவர்களின் வாழ்த்துகளைப் பெற்ற மணமக்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் பாராட்டுக்குரியவர்கள். இந்த நல்ல உள்ளங்களை நாமும் வாழ்த்துவோம்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...