போக்குவரத்து நிறைந்த முக்கிய சாலையில் திடீர் பள்ளம்- வாகன ஓட்டிகள் அவதி

கோவையில் நேற்றிரவு முதல் விடியவிடிய கொட்டித் தீர்த்த இடியுடன் கூடிய கனமழையால் கோவையில் பெருபாலான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. பாதாள சாக்கடைகள் அனைத்தும் நிரம்பி சாலையில் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது.



கோவை உப்பிலிபாளையம் மேம்பாலம் அருகில் உள்ள கோவை கூட்ஷெட் ரோட்டில் நேற்றிரவு 12 மணியளவில் இடியுடன் பெய்த கனமழை காரணமாக அப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில் அதிக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து, அந்த சாலையில் திடீரென ராட்சதப் பள்ளமும் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக, வாகன ஓட்டிகள் யாருக்கும் இதில் பாதிப்பு ஏற்படவில்லை.



முன்னதாக, இப்பகுதியில் ஏற்கனவே சாலை விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில் மாநகராட்சி நிர்வாகம் பேரிகார்டுகளை மட்டும் அமைத்தது. தொடர்ந்து அந்த சாலையினை சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தற்போது, சாலையின் நடுவே பெரியளவிலான பள்ளம் உருவாகியுள்ளதால் மேலும் இது பெரிதாமல் இருக்க மாநகராட்சி விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...