நீலகிரி கோடப்பமந்து கால்வாயினை திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்

நீலகிரி மாவட்டம், உதகை, கோடப்பமந்து கால்வாயினை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

நீலகிரி மாவட்டம், உதகையில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் குப்பைகளுடன் மழைநீர் கோடப்பமந்து கால்வாயில் வழிந்தோடியதால், ஆங்காங்கே குப்பைக் கழிவுகள் தேங்கியுள்ளதை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா திடீர் ஆய்வு மேற்கொண்டு பார்வையிட்டார்.



இந்நிகழ்வின் போது, உதகை ஏரியினை வந்தடையும் கோடப்பமந்து கால்வாயில் கனமழை பெய்யும்பொழுது ஏற்படும் வெள்ளநீர் தேங்காமால் சென்றடையவும், உதகை ரயில் நிலைய சாலையில் மழைநீர் தேங்காமல் வழிந்தோட உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதேபோல மத்திய பேருந்து நிலைய கால்வாய்களில் மழைநீர் தேங்காமல் முறையாக கோடப்பமந்து கால்வாயில் சென்றடைய உடனுக்குடன் குப்பைகளை அப்புறப்படுத்தி சீர்செய்யுமாறும், உதகை ஏரிக்கு கோடப்பமந்து கால்வாய் மூலம் வந்தடையும் மழைநீரில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாமல் உடனுக்குடன் பார்த்துக்கொள்ளுமாறும் நடவடிக்கை மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.



இந்நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் (ம) ஆணையாளர் (பொ), மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...