பொள்ளாச்சி- தென் மாவட்டங்களுக்கு பயணிகள் ரயில் இயக்காவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும்- அனைத்து கட்சி முடிவு

பொள்ளாச்சி அகல ரயில் பாதை வழியாக தென் மாவட்டங்களுக்கு பயணிகள் ரயில் இயக்காவிட்டால், தொடர் போராட்டங்கள் நடத்த அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

போத்தனூர்- பொள்ளாச்சி அகல ரயில் பாதைப் பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகிறது. ஆனால் இதுவரை தென் மாவட்டங்களுக்கு பயணிகள் ரயில் இயக்கப்படவில்லை. இது தொடர்பாக ரயில்வே நிர்வாகத்திற்கு பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

இதனைத்தொடர்ந்து, இன்று கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகத்தில் அனைத்துக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில், ரயில் இயக்கப்பாடாததை கண்டித்து வரும் செப்டம்பர் 7 ஆம் தேதியன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மேலும், அடுத்த கட்டமாக செப்டம்பர் 13-ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்துவதென அனைத்துக் கட்சி கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

ரயில்வே நிர்வாகம் ரயில் பெட்டி குறைபாடு என காரணம் கூறுவதால், ரயில் பெட்டி வாங்க பொது மக்களிடம் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தப்படும் என தபெதிக ஒருங்கிணைப்பாளர் கு.இராமகிருட்டிணன் தெரிவித்தார்.



இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் பங்கேற்றன.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...