உதகையில் காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் காவலர் அணிவகுப்பு பேரணி

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் உதகையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளிரம்பா தலைமையில் இன்று அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.



வரும் ஞாயிற்றுகிழமை உதகையில் ஸ்ரீவிநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுவதை முன்னிட்டு காவல்துறை கண்காணிப்பாளர் முரளிரம்பா தலைமையில் நடைபெற்ற அணிவகுப்பு ஊர்வலத்தில் ஏ.டி.எஸ்.பி பாஸ்கரன், காவல்துறை துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் உள்ளிட்டோருடன் சுமார் 500 காவலர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.

இந்த பேரணி அசம்பளி திரையங்கம் அருகில் தொடங்கி சேரிங்கிராஸ், காபி அவுஸ் சதுக்கம், மாரியம்மன் கோவில், மெயின் பஜார் வழியாக பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. இதேப்போல் காந்தல் பகுதியிலும் அணிவகுப்புப் பேரணி நடைபெற்றது.



நாளை (ஆகஸ்ட் 25) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நகரின் பல்வேறு இடங்களில் வழிபாட்டிற்காக வைக்கப்படும் விநாயகர் சிலைகள் வரும் ஞாயிற்றுக்கிழமை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு உதகை காமராஜர் அணையில் கரைப்பட உள்ளது. அதற்கான முன்னேற்பாட்டு பணியாகவே தற்போது காவல்துறையின் அணிவகுப்பு நடைபெற்றது.

Newsletter

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...