கோவை, சக்தி சாலையில் செயல்பட்டு வரும் எஸ்.என்.எஸ் பொறியியல் கல்லூரியில் 2ம் ஆண்டு படிக்கும் மாணவர் கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். இதையடுத்து மாணவர் உயிரிழந்தது குறித்து கல்லூரி நிர்வாகம் இன்று வரை வெளியில் கூறாமல் இருந்ததையடுத்து இன்று காலை அக்கல்லூரியைச் சேர்ந்த சக மாணவர்கள் ஒன்றிணைந்து வகுப்பை புறக்கணித்து கல்லூரியின் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரசாந்த் என்னும் மாணவர் எஸ்.என்.எஸ் பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் துறையில் 2-ஆம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் தீடீரென கல்லூரியின் விடுதியில் உயிரிழந்துள்ளார். ஆனால், பிரசாந்த் தற்கொலை செய்து உயிரிழக்கவில்லை என சக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, பிரசாந்த் உயிரிழப்பில் மர்மம் உள்ளதாகவும், இறந்து இரண்டு நாட்கள் கடந்தும் கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து எவ்வித தகவலும் வரவில்லை எனவும் கூறி அக்கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் வகுப்பை புறக்கணித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், கல்லூரி முதல்வர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களிடம் பேசுகையில், மருத்துவ அறிக்கை கிடைத்தவுடன், மாணவர் உயிரிழப்பில் உள்ள சந்தேகத்தை ஓரிரு நாட்களில் தெரிவிக்கப்படும் எனவும், காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து, மாணவர்கள் அனைவரும் போராட்டத்தைக் கைவிட்டு வகுப்பிற்குச் சென்றனர்.
பிரசாந்த் என்னும் மாணவர் எஸ்.என்.எஸ் பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் துறையில் 2-ஆம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் தீடீரென கல்லூரியின் விடுதியில் உயிரிழந்துள்ளார். ஆனால், பிரசாந்த் தற்கொலை செய்து உயிரிழக்கவில்லை என சக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, பிரசாந்த் உயிரிழப்பில் மர்மம் உள்ளதாகவும், இறந்து இரண்டு நாட்கள் கடந்தும் கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து எவ்வித தகவலும் வரவில்லை எனவும் கூறி அக்கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் வகுப்பை புறக்கணித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், கல்லூரி முதல்வர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களிடம் பேசுகையில், மருத்துவ அறிக்கை கிடைத்தவுடன், மாணவர் உயிரிழப்பில் உள்ள சந்தேகத்தை ஓரிரு நாட்களில் தெரிவிக்கப்படும் எனவும், காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து, மாணவர்கள் அனைவரும் போராட்டத்தைக் கைவிட்டு வகுப்பிற்குச் சென்றனர்.