இணைந்த ஒருதாய் குழந்தைகள் - நீக்கப்பட்ட சின்னம்மா !

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக சசிகலாவின் கையில் வசமடைந்தது. அதில் வெறுப்படைந்த அப்போதைய தமிழக முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக பிரிந்தார். தொடர்ந்து, சசிகலாவின் தலைமையில் அணிதிரன்ட பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் எடப்பாடி.பழனிசாமியை முதலமைச்சர் பதவிக்கு முன்மொழிந்து வாக்கெடுப்பின் மூலம் தேர்வு செய்யப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து, இரு அணிகளாக செயல்பட்டு வந்த அதிமுக அணிகள் மீண்டும் இணைக்கப்படும் என பலதரப்பினரால் கூறப்பட்டு வந்த நிலையிலும் இரு அணிகளுக்கு இடையிலும் கருத்து மோதல்களே தொடர்ந்து நிலவி வந்தது.

இந்நிலையில், பல்வேறு போராட்டங்களுக்குப் பின் நேற்று (ஆகஸ்ட் 22) அதிமுக-வின் இரு அணிகளும் ஒருமனதாக இணைந்தன. 

தொடர்ந்து, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதல்வர், நிதித்துறை பதவி ஓ.பன்னீர் செல்வத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. இணை ஒருங்கிணைப்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, அணிகள் இணைப்பிற்கு முன்பு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சின்னம்மாவாகிய சசிகலாவையும், தினகரனையும் கட்சியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் முன்மொழியப்பட்டது. நீடித்த பேச்சுவார்த்தைக்குப் பின் தினகரன் மற்றும் சசிகலா கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...