ஊதிய உயர்வு, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் இன்று மாநிலம் தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
'ஜாக்டோ' என்பது அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பாகும். 'ஜியோ' ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு. இந்த இரு கூட்டமைப்புகளும் இன்று தமிழகத்தில் மாநிலம் தழுவிய வேலை நித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களது நீண்டகால கோரிக்கைகளான ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய முறையை நடைமுறை படுத்துதல், மதிப்பு ஊதிய முறையை நீக்கி வரையறுக்கப்பட்ட ஊதியத்தை வழங்கிடுதல் உள்ளிட்ட 3 கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்படும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பல்வேறு அரசு ஊழியர்கள் கலந்து கொள்கின்றனர்.
இதனால், அரசு அலுவலகங்களில் பணி முடங்கியுள்ளது. அதோடு, ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டிருப்பதால் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அரசு பள்ளிகளுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் இறங்கியுள்ளது. போராட்டம் காரணமாக பள்ளிகள் பாதிக்காத வகையில் பிற சங்கங்களை சேர்ந்த ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் பகுதி நேர ஆசிரியர்களை கொண்டு, வழக்கம் போல் பள்ளிகள் இயக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.
'ஜாக்டோ' என்பது அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பாகும். 'ஜியோ' ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு. இந்த இரு கூட்டமைப்புகளும் இன்று தமிழகத்தில் மாநிலம் தழுவிய வேலை நித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களது நீண்டகால கோரிக்கைகளான ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய முறையை நடைமுறை படுத்துதல், மதிப்பு ஊதிய முறையை நீக்கி வரையறுக்கப்பட்ட ஊதியத்தை வழங்கிடுதல் உள்ளிட்ட 3 கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்படும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பல்வேறு அரசு ஊழியர்கள் கலந்து கொள்கின்றனர்.
இதனால், அரசு அலுவலகங்களில் பணி முடங்கியுள்ளது. அதோடு, ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டிருப்பதால் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அரசு பள்ளிகளுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் இறங்கியுள்ளது. போராட்டம் காரணமாக பள்ளிகள் பாதிக்காத வகையில் பிற சங்கங்களை சேர்ந்த ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் பகுதி நேர ஆசிரியர்களை கொண்டு, வழக்கம் போல் பள்ளிகள் இயக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.