மாநகராட்சி ஆணையர் உத்தரவைத் தொடர்ந்து டெங்கு ஒழிப்பு பணியில் அதிகாரிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்திகேயன் டெங்கு கொசு ஒழிப்பு குறித்து சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அனைத்து மண்டல உதவி ஆணையர்களுக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து அனைத்து மண்டலங்களிலும் மண்டல சுகாதார அலுவலர்களைக் கொண்டு கட்டுமான தளங்கள் மற்றும் காலியாக உள்ள தளங்களை ஆய்வு செய்து டெங்கு கொசு உற்பத்தியை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. 

இதன் தொடர்ச்சியாக கோவை மாநகராட்சியில், கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட 28 கட்டுமான தளங்களில் டெங்கு கொசு ஒழிப்பு குறித்த ஆய்வு செய்யப்பட்டது. முக்கியமாக திருச்சி ரோடு, ஏர்போர்ட் ரோடு, நஞ்சுண்டாபுரம் ரோடு, அவிநாசி ரோடு பகுதிகளில் கட்டுமான தளங்களை ஆய்வு செய்து, நீர்தேக்க தொட்டிகளில் அபேட் மருந்து ஊற்றுதல், தேவையான இடங்களில் பிளீச்சிங் பவுடர் பயன்படுத்துதல் மற்றும் தேவையற்ற பொருட்களை (பழைய டயர்கள், உபயோகமற்ற மண் பாண்டங்கள், பிளாஸ்டிக் கப்புகள்;) உடனடியாக அப்புறப்படுத்த  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், முந்தய ஆய்வின் போது மாநகராட்சி அலுவலர்களால் சுட்டிகாட்டப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்யாதவர்களுக்கு மொத்தமாக ரூ.8000 அபராதம் விதிக்கப்பட்டது.

வடக்கு மண்டலத்தில், 4, 27, 41, 29 மற்றும் 55 வார்டுக்குட்பட்ட 25 கட்டுமான தளங்களில் டெங்கு கொசு ஒழிப்பு குறித்த ஆய்வு செய்யப்பட்டது. முக்கியமாக விஸ்வநாதபுரம், முருகன் நகர், சின்னவேடம்பட்டி, மணியம் நகர், எம்.ஜி.ஆர் நகர் இரத்தினபுரி ஆகிய பகுதியில் கட்டுமான தளங்களை ஆய்வு செய்து, டெங்கு கொசு உற்பத்தியாவதை தடுக்கும் வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், முந்தய ஆய்வின் போது மாநகராட்சி அலுவலர்களால் சுட்டிகாட்டப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்யாதவர்களுக்கு மொத்தமாக ரூ.3000 அபராதம் விதிக்கப்பட்டது. 

மத்திய மண்டலத்திற்குட்பட்ட 42 கட்டுமான தளங்களில் டெங்கு கொசு ஒழிப்பு குறித்த ஆய்வு செய்யப்பட்டது. முக்கியமாக பி.எம்.சாமி காலனி, ராம் நகர், புளியகுளம், கெம்பட்டி காலனி போன்ற பகுதிகளில் கட்டுமான தளங்களை ஆய்வு செய்து, டெங்கு கொசு ஒழிப்பதற்கு தேவையான தடுப்பு முறைகளை உபயோகப்படுத்தினர். இந்த மண்டலத்தில் முந்தய ஆய்வின் போது மாநகராட்சி அலுவலர்களால் சுட்டிகாட்டப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்யாதவர்களுக்கு மொத்தமாக ரூ.2500 அபராதம் விதிக்கப்பட்டது.

மேற்கு மண்டலத்திற்குட்பட்ட 32 கட்டுமான தளங்களில் டெங்கு கொசு ஒழிப்பு குறித்த ஆய்வு செய்யப்பட்டது. முக்கியமாக பாரதி பார்க், எஸ்.பி.காலனி, அழகேசன் ரோடு, ஜெயலட்சுமி நகர், வெங்கிடகிருஷ்ணா ரோடு, மணியம் காளியப்பன் வீதி போன்ற பகுதிகளில் கட்டுமான தளங்கள் ஆய்வு செய்து, டெங்கு கொசு ஒழிப்பதற்கு தேவையான தடுப்பு முறைகளை உபயோகப்படுத்தினர். மேலும், முந்தய ஆய்வின் போது மாநகராட்சி அலுவலர்களால் சுட்டிகாட்டப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்யாதவர்களுக்கு மொத்தமாக ரூ.6500 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், தெற்கு மண்டலத்தில் 89-வது வார்டுக்குட்பட்ட மருதம் நகரில் டெங்கு கொசு ஒழிப்புக்கு தேவையான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

Newsletter

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...