முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலிமாறன் பிறந்த நாள் தினம் கோவையில் அனுசரிப்பு

திமுக முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 84-வது பிறந்தநாள் விழாவையொட்டி தமிழகம் முழுவதும் திமுக-வினர் அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை மாநகர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக-வினர் சார்பில் கோவை டாடாபாத்தில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் முரசொலிமாறன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக், மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முரசொலிமாறன் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி திமுக கட்சியினர் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதேப்போல், தெப்பக்குளம் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் நாச்சிமுத்து, வழக்கறிஞர் கணேஷ்குமார் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சிகளில், முன்னாள் எம்பி விடுதலை விரும்பி, மாவட்ட துணைச் செயலாளர்கள் ரவிச்சந்திரன், மதனகோபால், பகுதி செயலாளர்கள் வி.பி.செல்வராஜ், சுந்தரம், புதூர் மணி, மகளிரணியை சேர்ந்த உமா மகேஷ்வரி, சரஸ்வதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...