முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலிமாறன் பிறந்த நாள் தினம் கோவையில் அனுசரிப்பு

திமுக முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 84-வது பிறந்தநாள் விழாவையொட்டி தமிழகம் முழுவதும் திமுக-வினர் அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை மாநகர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக-வினர் சார்பில் கோவை டாடாபாத்தில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் முரசொலிமாறன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக், மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முரசொலிமாறன் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி திமுக கட்சியினர் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதேப்போல், தெப்பக்குளம் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் நாச்சிமுத்து, வழக்கறிஞர் கணேஷ்குமார் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சிகளில், முன்னாள் எம்பி விடுதலை விரும்பி, மாவட்ட துணைச் செயலாளர்கள் ரவிச்சந்திரன், மதனகோபால், பகுதி செயலாளர்கள் வி.பி.செல்வராஜ், சுந்தரம், புதூர் மணி, மகளிரணியை சேர்ந்த உமா மகேஷ்வரி, சரஸ்வதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...