நாட்டின் பன்முக பண்பாடுகளை பேணிக்காக்க வேண்டும் - மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா

கோவை ஆத்துப்பாலம் பகுதியில் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் மருத்துவ முகாம் தொடங்கப்பட்டது. இந்த மருத்துவ முகாமை துவங்கி வைப்பதற்காக மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கோவை வந்தார்.

அப்போது அவர்  செய்தியாளர்களிடம் பேசியதாவது :-  நாட்டின் 71-வது சுதந்திர நாளன்று வேற்றுமையில் ஒற்றுமை, மத நல்லிணக்கணம் மற்றும் நாட்டின் பன்முக பண்புகளை பேணி காப்பாற்ற உறுதியேற்க வேண்டும்.  



மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பறிக்க ஒவ்வொரு நடவடிக்கையாக எடுத்து வருகிறது. நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு சரியாக செயல்பட தவறியதால் மாணவர்களின் மருத்துவ படிப்பு கேள்விக்குறியாகியுள்ளது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு மத்திய அரசு ஓராண்டு விலக்கு அளிப்பது ஏற்புடையது அல்ல, நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும்.

அதிமுக 3 அணிகளும் பாஜக-விடம் அடகு வைக்கப்பட்டுள்ளது. அதிமுக அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் மதுரை கூட்டம் ஒரு நாடகம். பாஜக-வுக்கு யார் முதலில் கூஜா தூக்குவது என்பதற்காகவே அந்த பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

தமிழக அரசு செயலிழந்து விட்டு கோமா நிலையில் உள்ளது. மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளைகளில் மக்கள் நலனை தமிழக அரசு காவு கொடுத்து வருகிறது. 

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். 

தமிழகத்தில் வலிமையான அரசு இல்லை என்பதால் காவிரியில் தண்ணீர் திறந்து விடமாட்டோம் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யா கூறியிருப்பதும் கண்டனத்துக்குரியது. இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...