அதிமுக-வில் 3 அணிகளும் கூட்டு கொள்ளையர்கள் - அன்புமணி ராமதாஸ் கடும் தாக்கு

தமிழக அரசு மத்திய அரசின் அடிமையாக இருப்பதாகவும் அதிமுகவில் உள்ள மூன்று அணிகளும் கூட்டு கொள்ளையர்கள் என்றும் பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

பாமக இளைஞரணி தலைவரும், தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-



அவிநாசி திட்டத்தை நிறைவேற்றக்கோரி, இன்று ஒருநாள் விழிப்புணர்வு பேரணி நடத்த உள்ளோம். 55 ஆண்டு கால கோரிக்கையான இத்திட்டம் நிறைவேற்றினால் 3 மாவட்டங்கள் பயன்பெறும். பவானி ஆற்று நீர் ஆண்டுக்கு 20 - 100 டி.எம்.சி கடலில் கலந்து வீணாகிறது. 1.2 டிஎம்சி தண்ணீரில் இத்திட்டத்தை செயல்படுத்த முடியும். வெறும் அறிவிப்போடு நிற்கும் இத்திட்டத்தை, தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்துவோம்.

மத்திய அரசின் அடிமைகளாக தமிழக அரசு உள்ளது. இதனால், மாநில அரசின் உரிமைகள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதிமுகவில் தற்போது உள்ள 3 அணியினரும் கூட்டுக் கொள்ளையர்கள்.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கடும் குற்றம் சாட்டியுள்ளார்.

Newsletter

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...