கோவையில் தூய்மை பாரத இயக்கம் குறித்த சுகாதார விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கிவைத்தார்

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியம் தேவராயபுரம் ஊராட்சி ஒன்றியப்பள்ளியில் இன்று தூய்மை பாரத இயக்கம் குறித்த சுகாதார விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கொடியசைத்து துவக்கிவைத்தார்.



பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:-

கோவை மாவட்டம் முழுவதும் தூய்மை பாரத இயக்கம் குறித்த சுகாதார பேரணிகள் நடத்தப்பட்டுவருகிறது. ஒவ்வொரு கிராமத்தையும் தூய்மை கிராமமாக மாற்ற ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும். திறந்த வெளியில் மலம் கழிப்பதால்  ஏற்படும் நோய்கள், வருமான இழப்பு, மருத்துவ செலவு, குழந்தைகளின் வளர்ச்சி பாதிப்பு, ஆகியவற்றை அனைத்து தரப்பினரிடமும் கொண்டு சேரும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

மேலும் வீட்டுக்கு வீடு கழிப்பறை கட்டுதல் மற்றும் கழிப்பறை பயன்பாட்டினை பொதுமக்களிடத்தில் இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் எடுத்துரைக்கப்படுகிறது. பெண்களின் கௌவுரவத்தை காப்பதற்கும், மாற்று திறனாளிகள் மற்றும் முதியவர்களின் நலன் காத்திடவும் கழிப்பறை அவசியம் என்பதை அனைவரும் உணர வேண்டும். நம் கிராமத்தை திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற மாற்றுதல் நம் ஒவ்வொருவரின் முயற்சியில் உள்ளது என தெரிவித்தார்.



முன்னதாக பள்ளி மாணவ, மாணவிகள் முழு சுகாதார தமிழகம்!!! - முன்னோடி தமிழகம்!!! என்ற உறுதிமொழியை சுகாதாரத்தை பேணி காத்திடும் வகையில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதனைத்தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நிலவேம்பு கசாயத்தை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.



இந்த விழிப்புணர்வு பேரணியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (திட்ட இயக்குநர்) ரூபன்சங்கர்ராஜ், உதவி இயக்குநர் (ஊராட்சி) பத்மாவதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பார்த்திபன், சீனிவாசன் மற்றும் அரசு அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...