வங்கி தொடர் விடுமுறையால் சில்லறை தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை- கோவை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தலைமை மேலாளர்



வருகிற 12ம் தேதி (நாளை) இரண்டாவது சனிக்கிழமை, 13-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 14-ம் தேதி திங்கட்கிழமை கிருஷ்ண ஜெயந்தி, 15-ம் தேதி செவ்வாய்க் கிழமை சுதந்திர தினம் என தொடர்ச்சியாக 4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை நாட்கள் வருகிறது. இந்த நான்கு நாட்கள் வங்கியில் தொடர் விடுமுறையை அடுத்து பண பரிவர்த்தனை குறித்து கோவை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தலைமை மேலாளர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:-

பொதுமக்கள் தற்போது ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனை மற்றும் பணம் பரிமாற்றம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது சமுதாயத்தில் படித்தவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதால் அவர்கள் வங்கிக்கு வருவதை பெரும்பாலும் தவிர்கின்றனர். 

மாறாக, ஆன்லைன் மற்றும் அனைத்து வங்கிகள் மூலமாகவும் டெபாசிட் மெஷின்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் வைத்திருப்பதால், பொதுமக்கள் அங்கே சென்று பண பரிவர்த்தனை செய்து கொள்கின்றனர். இதில், பாமர மக்களில் ஒரு சிலர் மட்டுமே வங்கிக்கு சென்று பணம் பரிவர்த்தனை செய்து வருகின்றனர்.



மேலும், இதுபோன்ற பாமர மக்களுக்கு வங்கிகள் மூலமாகவும் பண பரிவத்தனை எவ்வாறு செய்யலாம் என்பது குறித்து விழிப்புணர்வும் கொடுக்கின்றோம்.

பொதுவாக, இதுபோன்ற தொடர் விடுமுறைகளின் போது பொதுமக்களுக்கு அவசர காலங்களில் சுலப முறையில் பணம் எடுக்கும் வகையில் ஏ.டி.எம் மெஷின்களில் அதிக அளவில் பணம் நிரப்பப்படும். 

ஏ.டி.எம்-களில் ஒரு நாட்களில் ரூபாய் 20,000 வரை ஒரு நபர் எடுத்துக்கொள்ளலாம். அதேபோல், 500, 2000 மற்றும் 100 ரூபாய் நோட்டுக்கள் ஏ.டி.எம் மெஷின்களில் வைத்திருப்பதால், ஒருநபர் 2000 ரூபாயினை எடுக்கும் பொழுது மக்களுக்கு சிரமமின்றி அவை சில்லரை முறையில் 100 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களாகவும் கிடைக்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் சில்லறை தட்டுப்பாடு பொதுமக்களுக்கு இருக்க வாய்ப்பில்லை.

இவ்வாறு கோவை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தலைமை மேலாளர் கூறினார்.

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...