வங்கி தொடர் விடுமுறையால் சில்லறை தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை- கோவை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தலைமை மேலாளர்



வருகிற 12ம் தேதி (நாளை) இரண்டாவது சனிக்கிழமை, 13-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 14-ம் தேதி திங்கட்கிழமை கிருஷ்ண ஜெயந்தி, 15-ம் தேதி செவ்வாய்க் கிழமை சுதந்திர தினம் என தொடர்ச்சியாக 4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை நாட்கள் வருகிறது. இந்த நான்கு நாட்கள் வங்கியில் தொடர் விடுமுறையை அடுத்து பண பரிவர்த்தனை குறித்து கோவை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தலைமை மேலாளர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:-

பொதுமக்கள் தற்போது ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனை மற்றும் பணம் பரிமாற்றம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது சமுதாயத்தில் படித்தவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதால் அவர்கள் வங்கிக்கு வருவதை பெரும்பாலும் தவிர்கின்றனர். 

மாறாக, ஆன்லைன் மற்றும் அனைத்து வங்கிகள் மூலமாகவும் டெபாசிட் மெஷின்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் வைத்திருப்பதால், பொதுமக்கள் அங்கே சென்று பண பரிவர்த்தனை செய்து கொள்கின்றனர். இதில், பாமர மக்களில் ஒரு சிலர் மட்டுமே வங்கிக்கு சென்று பணம் பரிவர்த்தனை செய்து வருகின்றனர்.



மேலும், இதுபோன்ற பாமர மக்களுக்கு வங்கிகள் மூலமாகவும் பண பரிவத்தனை எவ்வாறு செய்யலாம் என்பது குறித்து விழிப்புணர்வும் கொடுக்கின்றோம்.

பொதுவாக, இதுபோன்ற தொடர் விடுமுறைகளின் போது பொதுமக்களுக்கு அவசர காலங்களில் சுலப முறையில் பணம் எடுக்கும் வகையில் ஏ.டி.எம் மெஷின்களில் அதிக அளவில் பணம் நிரப்பப்படும். 

ஏ.டி.எம்-களில் ஒரு நாட்களில் ரூபாய் 20,000 வரை ஒரு நபர் எடுத்துக்கொள்ளலாம். அதேபோல், 500, 2000 மற்றும் 100 ரூபாய் நோட்டுக்கள் ஏ.டி.எம் மெஷின்களில் வைத்திருப்பதால், ஒருநபர் 2000 ரூபாயினை எடுக்கும் பொழுது மக்களுக்கு சிரமமின்றி அவை சில்லரை முறையில் 100 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களாகவும் கிடைக்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் சில்லறை தட்டுப்பாடு பொதுமக்களுக்கு இருக்க வாய்ப்பில்லை.

இவ்வாறு கோவை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தலைமை மேலாளர் கூறினார்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...