அறுவை சிகிச்சையில் திறமை அவசியம்- அறுவை சிகிச்சை மருத்துவர்களின் 41-வது மாநாட்டில் அரசு மருத்துவமனை டீன் பேச்சு

தமிழ்நாடு அறுவை சிகிச்சை மருத்துவர்களின் 41-வது மாநாடு முதன் முறையாக கோவை அரசு மருத்துவமனையால் இன்று அரசு மருத்துவக் கல்லூரியில் துவங்கியது.

இதன் முதல் நாள் அமர்வில், தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகள் காணொளிக்காட்சி மூலம் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. மேலும், அந்த அறு சிகிச்சையின் போது மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்கள் விளக்கமளித்தனர். முன்னதாக இந்த காணொளிக்காட்சி நிகழ்ச்சி மற்றும் மாநாட்டினை கோவை அரசு மருத்துவமனையின் டீன் அசோகன் துவக்கி வைத்து உரையாற்றினார்.



அப்போது அவர் பேசுகையில், தற்போதுள்ள தொழில்நுட்ப மேன்மையடைந்த காலகட்டத்தில் அறுவை சிகிச்சைகள் குறித்து சமூகவளைதலங்களில் அதிகமாக காணொளிக்காட்சிகள் பகிரப்படுகின்றன. ஆனால், அதுகுறித்தான நம் சந்தேகங்களை நாம் அறிய முடிவதில்லை. இதுபோன்ற கருத்தரங்குகள் மூலமாகவே அறுவை சிகிச்சைகள் குறித்து நாம் அறிந்துகொள்ள முடியும். 



நமது பாரம்பரியத்தின்படி வேதகாலத்தில் சுமார் 3600 ஆண்டுகளுக்கு முன்பே மருத்துவம் துவங்கி விட்டது. பிளாஸ்டிக் சர்ஜரி எனப்படும் அறுவை சிகிச்சை 600 ஆண்டுகளுக்கு முன்பே சுஸ்ருதா என்பவரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மருத்துவர்களுக்கு திறமை மிகவும் அவசியம். அது இதுபோன்ற கருத்தரங்குகளில் பங்கேற்பதன் மூலமே அதிகரிக்கும்".

இவ்வாறு கோவை அரசு மருத்துவமனையின் டீன் அசோகன் பேசினார்.

இந்த அறுவை சிகிச்சை மருத்துவர்களின் 41-வது மாநாட்டில் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மருத்துவர்கள் பங்கேற்றனர். மேலும், கோவையில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர், மருத்துவர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.



Newsletter

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...