ஒண்டிப்புதூர் கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்திற்கு வீடுகள் மற்றும் நிறுவனங்களின் பாதாள சாக்கடையை இணைக்க உத்தரவு

கோவை, ஒண்டிப்புதூர் கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்துக்கு சுற்றுவட்டார பகுதியில் 1,500 பாதாள சாக்கடை இணைப்பு வழங்க கோவை மாநகராட்சி சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் கழிவு நீர் சாலையில் செல்லாமல் இருக்கவும், குளத்தில் கலக்காமலும், வடிகாலில் மழை நீர் மட்டுமே செல்லும் வகையில் கட்டுமானம் செய்ய வேண்டும். அத்தகைய ஏற்பாடு செய்யும்போது கொசு பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்ற அடிப்படையில் பழைய மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட 60 வார்டுகளுக்கு உக்கடம், நஞ்சுண்டாபுரம், ஒண்டிப்புதூரில் கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. 

கோவையில் பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது ஹோப் காலேஜ் முதல் சிங்காநல்லுார் வரை பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. திருச்சி ரோட்டில் அல்வேர்னியா கான்வென்ட் முதல் ஒண்டிப்புதூர் வரை, தேசிய நெடுஞ்சாலையின் ஒரு புறத்தில் குழாய் பதிக்க வேண்டியுள்ளது. இதற்கு ரூ.5.25 கோடி செலுத்த வேண்டும். மாநகராட்சியில் நிதி இல்லாததால், இப்பணி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. பாதாள சாக்கடை குழாய் பதிப்பதற்கு எவ்வளவு செலவாகும் என திருத்திய மதிப்பீடு தயாரிக்க பொறியியல் பிரிவினருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

தற்போது, உக்கடத்தில் கட்டுமான பணி முடிந்து கழிவு நீர் சுத்திகரிக்கப்படுகிறது. நஞ்சுண்டாபுரத்தில் சுத்திகரிப்பு மையம் அமைக்க அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் கட்டுமான பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது. ஒண்டிப்புதூரில் நாளொன்றுக்கு 6 கோடி லிட்டர் கழிவு நீர் சுத்திகரிக்கும் திறனுள்ள மையம் கட்டப்பட்டு உள்ளது. தற்போது, ஒரு கோடி லிட்டர் சுத்திகரிக்கப்படுகிறது.

ஒண்டிப்புதூர் கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்தின் செயல்பாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். சோதனை ஓட்டம் முடிந்து விட்டதால் வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு இணைப்பு கொடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. 

தற்போதுள்ள சூழலில் எந்தெந்த பகுதிகளில் இணைப்பு கொடுக்க வாய்ப்பு இருக்கிறது என பொறியியல் பிரிவினருடன் கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து, மையத்தின் சுற்றுவட்டார பகுதியில் 1,500 இணைப்புகள் வழங்க மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...