ஒண்டிப்புதூர் கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்திற்கு வீடுகள் மற்றும் நிறுவனங்களின் பாதாள சாக்கடையை இணைக்க உத்தரவு

கோவை, ஒண்டிப்புதூர் கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்துக்கு சுற்றுவட்டார பகுதியில் 1,500 பாதாள சாக்கடை இணைப்பு வழங்க கோவை மாநகராட்சி சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் கழிவு நீர் சாலையில் செல்லாமல் இருக்கவும், குளத்தில் கலக்காமலும், வடிகாலில் மழை நீர் மட்டுமே செல்லும் வகையில் கட்டுமானம் செய்ய வேண்டும். அத்தகைய ஏற்பாடு செய்யும்போது கொசு பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்ற அடிப்படையில் பழைய மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட 60 வார்டுகளுக்கு உக்கடம், நஞ்சுண்டாபுரம், ஒண்டிப்புதூரில் கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. 

கோவையில் பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது ஹோப் காலேஜ் முதல் சிங்காநல்லுார் வரை பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. திருச்சி ரோட்டில் அல்வேர்னியா கான்வென்ட் முதல் ஒண்டிப்புதூர் வரை, தேசிய நெடுஞ்சாலையின் ஒரு புறத்தில் குழாய் பதிக்க வேண்டியுள்ளது. இதற்கு ரூ.5.25 கோடி செலுத்த வேண்டும். மாநகராட்சியில் நிதி இல்லாததால், இப்பணி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. பாதாள சாக்கடை குழாய் பதிப்பதற்கு எவ்வளவு செலவாகும் என திருத்திய மதிப்பீடு தயாரிக்க பொறியியல் பிரிவினருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

தற்போது, உக்கடத்தில் கட்டுமான பணி முடிந்து கழிவு நீர் சுத்திகரிக்கப்படுகிறது. நஞ்சுண்டாபுரத்தில் சுத்திகரிப்பு மையம் அமைக்க அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் கட்டுமான பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது. ஒண்டிப்புதூரில் நாளொன்றுக்கு 6 கோடி லிட்டர் கழிவு நீர் சுத்திகரிக்கும் திறனுள்ள மையம் கட்டப்பட்டு உள்ளது. தற்போது, ஒரு கோடி லிட்டர் சுத்திகரிக்கப்படுகிறது.

ஒண்டிப்புதூர் கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்தின் செயல்பாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். சோதனை ஓட்டம் முடிந்து விட்டதால் வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு இணைப்பு கொடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. 

தற்போதுள்ள சூழலில் எந்தெந்த பகுதிகளில் இணைப்பு கொடுக்க வாய்ப்பு இருக்கிறது என பொறியியல் பிரிவினருடன் கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து, மையத்தின் சுற்றுவட்டார பகுதியில் 1,500 இணைப்புகள் வழங்க மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...