சுகாதார துப்புரவுப் பணியாளர்களுக்கு ஒப்பந்தப்படி ஊதியம் வழங்கக் கோரி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் மனு

நகராட்சி ஒப்பந்த சுகாதார துப்புரவுப் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவுப் படி ஊதியம் வழங்கக் கோரி கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



இதுகுறித்து கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் (சிஐடியு) மாவட்ட பொதுச் செயலாளர் கே.ரத்தினகுமார், ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் 151 தொழிலாளர்கள் சுகாதார துப்புரவுப் பணியில் கடந்த 6 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர். மேற்கண்ட தொழிலாளர்களுக்கு மாவட்ட ஆட்சியரால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி ஊதியம் வழங்குவது இல்லை. மாறாக ஆண்களுக்கு ரூ.220 மற்றும் பெண்களுக்கு ரூ.180 என்ற அடிப்படையில் இரண்டு விதமான ஊதியம் ஒப்பந்ததாரரால் வழங்கப்பட்டு வருகிறது. இதுவும் வங்கி மூலம் வழங்குவது இல்லை. மாறாக நேரடியாக வழங்கப்படுகிறது.

2016- 2017 ஆம் ஆண்டிற்கு குறைந்தபட்ச ஊதியமாக துப்புரவு பணியாளர்களுக்கு தினக்கூலி ரூ.300 வழங்க வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதை இன்றைய தேதி வரையில் மேற்கண்ட பணியாளர்களுக்கு அமல்படுத்தப்படவில்லை. 

எனவே, இதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஆட்சியர் உத்தரவுப்படி அனைவருக்கும் ஒரே மாதிரியான ஊதியம் ரூ.300 வழங்க வேண்டும்.

இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...