சுகாதார துப்புரவுப் பணியாளர்களுக்கு ஒப்பந்தப்படி ஊதியம் வழங்கக் கோரி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் மனு

நகராட்சி ஒப்பந்த சுகாதார துப்புரவுப் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவுப் படி ஊதியம் வழங்கக் கோரி கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



இதுகுறித்து கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் (சிஐடியு) மாவட்ட பொதுச் செயலாளர் கே.ரத்தினகுமார், ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் 151 தொழிலாளர்கள் சுகாதார துப்புரவுப் பணியில் கடந்த 6 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர். மேற்கண்ட தொழிலாளர்களுக்கு மாவட்ட ஆட்சியரால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி ஊதியம் வழங்குவது இல்லை. மாறாக ஆண்களுக்கு ரூ.220 மற்றும் பெண்களுக்கு ரூ.180 என்ற அடிப்படையில் இரண்டு விதமான ஊதியம் ஒப்பந்ததாரரால் வழங்கப்பட்டு வருகிறது. இதுவும் வங்கி மூலம் வழங்குவது இல்லை. மாறாக நேரடியாக வழங்கப்படுகிறது.

2016- 2017 ஆம் ஆண்டிற்கு குறைந்தபட்ச ஊதியமாக துப்புரவு பணியாளர்களுக்கு தினக்கூலி ரூ.300 வழங்க வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதை இன்றைய தேதி வரையில் மேற்கண்ட பணியாளர்களுக்கு அமல்படுத்தப்படவில்லை. 

எனவே, இதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஆட்சியர் உத்தரவுப்படி அனைவருக்கும் ஒரே மாதிரியான ஊதியம் ரூ.300 வழங்க வேண்டும்.

இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...