ஓணம் பண்டிகை வரும் செப்.,3ம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு எர்ணாகுளம் - வேளாங்கண்ணிக்கு ஆகஸ்ட் 31 முதல் சிறப்பு ரயில் இயக்கப்படும் என பாலக்காடு ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 7-ம் தேதி வரை எர்ணாகுளம் - வேளாங்கண்ணிக்கு இரவு 9 மணிக்கும், செப்டம்பர் 1 முதல் 8-ம் தேதி வரை வேளாங்கண்ணி - எர்ணாகுளத்திற்கு மதியம் 2:20 மணிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும்.
பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 7-ம் தேதிகளில் எர்ணாகுளத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு, அடுத்தநாள் காலை 10:15 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும்.
அதேப்போல், செப்டம்பர் 1 முதல் 8-ம் தேதிகளில் வேளாங்கண்ணியில் இருந்து மதியம் 2:20 மணிக்கு புறப்பட்டு, அடுத்தநாள் காலை 3:30 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும்.
ரயில் செல்லும் வழித்தடங்கள்:
ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, பொள்ளாச்சி, பழநி, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாவூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய வழித்தடங்களில் ரயில் நின்று செல்லும்.
அதில் ஈரடுக்கு ஏ.சி., மூன்றடுக்கு ஏ.சி., 7 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 3 பொது மற்றும் 2 நிலை பெட்டிகள், 2 சரக்கு மற்றும் ரயில் உபகரண பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும் என அறிவித்துள்ளது.