திருப்பூரில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் தமிக முதலமைச்சர் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழா  நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பலர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியின் போது பல்வேறு நலத்திட்டங்களும் துவங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில், தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் மற்றும் மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை ஆகியோர் நிகழ்ச்சித் திடலில் அமைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் உருவப்படத்திற்க்கு மலர்தூவி நூற்றாண்டு விழாவைத் தொடங்கி வைத்தனர். 



இதனைத்தொடர்ந்து, திடலில் அமைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் புகைப்படக் கண்காட்சி மையம் துவக்கி வைக்கப்பட்டது. அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், தளவாய் சுந்தரம், செல்லூர் ராஜூ, உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கடம்பூர் ராஜூ உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 



பின்னர், விழா அரங்கில் வைக்கப்பட்டிருந்த பெரியளவிலான மின்சாரத் திரைகளில் எம்ஜிஆரின் திரையுலகம், அரசியல், ஆட்சி உள்ளிட்ட பயணங்கள் குறித்து காணொளிகள் பொதுமக்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. அதன் பிறகு மாவட்டம் முழுவதும் இருந்து அழைத்து வரப்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்குத் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு துவங்கி நடத்தப்பட்டது.



இதைத்தொடர்ந்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உரையாற்றினார். அப்போது, மாணவர்கள் அனைவரும் என்றுமே தங்களின் முயற்சிகளை கைவிடக் கூடாது. என்று முயற்சி செய்வதை கை விடுகிறோமோ அன்று நாம் பின்னடைவை சந்திக்க துவங்குகிறோம். மாணவர்கள் வாழ்க்கையில் தொடர்ந்து முயற்சிகள் செய்து பல வெற்றிகளைக் குவிக்க வேண்டும் என்றார்.

பின்னர் பேசிய மக்களவைத் துணை சபாநாயகர் மு.தம்பிதுரை, உறுதியான போராட்ட குணம்கொண்ட எம்ஜிஆரின் வாழ்க்கை நம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். நாட்டின் எதிர்காலத்தை நல்லவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதற்காகவே இன்று மாணவர்களை இந்நிகழ்ச்சியின் விருந்தினர்களாக அழைத்து வந்திருக்கிறோம்'' என்றார்.

தொடர்ந்து, இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக எம்ஜிஆரின் திரைப்படப் பாடல்கள் அடங்கிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின், மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று எம்ஜிஆரின் அரசியல் வாழ்க்கை குறித்தும், அதிமுக அரசின் ஆளும் பணிகள் குறித்தும் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார்.

Newsletter

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...