ஜிஎஸ்டி வரியால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்- நீலகிரியில் தமாகா தலைவர் பேட்டி


நீலகிரி மாவட்டம் குன்னூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது. குன்னூர்  நகர தலைவர் ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்று கொடியேற்றி வைத்தார். 

இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியதாவது:-

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுக வட்டாரத்தில் கொலை மற்றும் கொள்ளைகள் அதிகரித்து வருகிறது. மர்மமான முறையிலும் தற்கொலைகள் நடைபெறுவதால் இதனை சிபிஜ விசாரணை மேற்கொள்ள வேண்டும். மேலும் ஜிஎஸ்டி வரியினால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பட்டாசு, ஜவுளி, ஓட்டல் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அனைத்து மக்களிடையே கருத்து கேட்க வேண்டும்' என தெரிவித்தார்.

இதில் குன்னூர் நகர தலைவர் ஆனந்த குமார், மாநில துணைத் தலைவர் கோவை தங்கம், மாநில பொதுச் செயலாளர் விடியல் சேகர், மாநில இளைஞரணித் தலைவர் யுவராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...