முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பொருளாதாரத்தில் தலை சிறந்தவர் என்ற எண்ணம் கொண்டவர் - இல.கணேசன் பேட்டி

முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தான் மட்டுமே பொருளாதாரத்தில் தலை சிறதவர் என்ற எண்ணம் கொண்டவர் என இல.கணேசன் விமர்சித்துள்ளார்.

கோவை கட்சி நிர்வாகி ஒருவரின் திருமண விழாவில் பங்கேற்க விமானம் மூலம் வந்த பா.ஜ.க மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, பா.ஜ.க அரசு அனைத்து கட்சிகளுடன் கலந்து பேசியே ஜி.எஸ்.டியினை அமல்படுத்தியது எனவும் பா.ஜ.க விற்கு பெருமை சேர்ந்து விட கூடாது என்பதற்காகவே காங்கிரஸ் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் நாடாளுமன்ற கூட்டத்தை புறக்கணித்ததாக தெரிவித்தார்.

முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்  பொருளாதாரத்தில் தான்  மட்டுமே தலைசிறந்தவர் என்ற எண்ணம் கொண்டவர் எனவும்  ஜி.எஸ்.டி குறித்து விவாதிக்க விரும்பி இருந்தால் அவர் நாடாளுமன்றத்திற்கு வந்திருக்க வேண்டும் என ஜி.எஸ்.டி குறித்து சிதம்பரம் கூறய கருத்தை விமர்சித்தார்.

மேலும், சிதம்பரம் உள்ளிட்ட எதிர்கட்சிகள், பொதுமக்கள் போன்றவர்களின் விமர்சனங்களை, கருத்துகளை, ஆலோசனைகளை பா.ஜ.க வரவேற்பதாக தெரிவித்தார். தமிழக அரசு தற்போது ஆட்சியில் கவனம் செலுத்த துவங்கி உள்ளது என கூறியவர் கல்வி துறை சிறப்பாக செயல்பட துவங்கியது போல மற்ற துறைகளிலும் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும் எனறார்.

அதிமுக ஆட்சி கலையும் சூழல் தமிழகத்திற்கு வரக்கூடாது என தெரிவித்தவர் தமிழகத்தில் ஆட்சி கலைய வேண்டும் என்பது திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் எதிர்பார்ப்பு எனவும் ஆனால தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வராது எனவும் இல.ணேசன் தெரிவித்தார்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...