முன்னறிவிப்பின்றி பணி நீக்கம் செய்யப்பட்டதால் கோவையில் தனியார் நிறுவன ஊழியர்கள் 50-க்கும் மேற்பட்டோர் நிறுவனத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாவட்டம், ஈச்சனாரி அடுத்த செட்டிபாளையம் பகுதியில் கில்பர் கோ வீடர் ரூட் இந்தியன் பிரைவேட் லிமிடட் என்ற தனியார் எம்.என்.சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு இந்திய அரசின் பெட்ரோலிய துறையின் ஒப்பந்தத்தின் பேரில் பெட்ரோல் பம்புகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் 100 நிரந்தர ஊழியர்களும், 150-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களும் என 250-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்களை திங்கட்கிழமை முதல் பணிக்கு வரவேண்டாம் என நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஒப்பந்த ஊழியர்கள் நிறுவனத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து கில்பர் கோ வீடர் ரூட் இந்தியன் பிரைவேட் லிமிடட் நிர்வாகத் தரப்பில், அரசின் ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டதாகவும் இதனால் தொழிலாளர்களுக்கு வேலை வழங்க இயலாது என விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவன ஊழியர்கள் கூறுகையில், திடீரென ஒப்பந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்வது இந்நிறுவனத்தின் வாடிக்கையாக உள்ளது. இதனை தடுக்கவே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென பணிக்கு வர வேண்டாம் என நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனை நம்பி உள்ள தொழிலாளர்களின் குடும்பங்கள் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்படக் கூடும்.
மூன்று மாத கால அவகாசம் வழங்க வேண்டும் அல்லது மூன்று மாத ஊதியத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை உள்ளிருப்பு போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம், ஈச்சனாரி அடுத்த செட்டிபாளையம் பகுதியில் கில்பர் கோ வீடர் ரூட் இந்தியன் பிரைவேட் லிமிடட் என்ற தனியார் எம்.என்.சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு இந்திய அரசின் பெட்ரோலிய துறையின் ஒப்பந்தத்தின் பேரில் பெட்ரோல் பம்புகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் 100 நிரந்தர ஊழியர்களும், 150-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களும் என 250-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்களை திங்கட்கிழமை முதல் பணிக்கு வரவேண்டாம் என நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஒப்பந்த ஊழியர்கள் நிறுவனத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து கில்பர் கோ வீடர் ரூட் இந்தியன் பிரைவேட் லிமிடட் நிர்வாகத் தரப்பில், அரசின் ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டதாகவும் இதனால் தொழிலாளர்களுக்கு வேலை வழங்க இயலாது என விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவன ஊழியர்கள் கூறுகையில், திடீரென ஒப்பந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்வது இந்நிறுவனத்தின் வாடிக்கையாக உள்ளது. இதனை தடுக்கவே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென பணிக்கு வர வேண்டாம் என நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனை நம்பி உள்ள தொழிலாளர்களின் குடும்பங்கள் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்படக் கூடும்.
மூன்று மாத கால அவகாசம் வழங்க வேண்டும் அல்லது மூன்று மாத ஊதியத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை உள்ளிருப்பு போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.