முன்னறிவிப்பின்றி பணி நீக்கம் செய்த தனியார் நிறுவனத்தைக் கண்டித்து ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

முன்னறிவிப்பின்றி பணி நீக்கம் செய்யப்பட்டதால் கோவையில் தனியார் நிறுவன ஊழியர்கள் 50-க்கும் மேற்பட்டோர் நிறுவனத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்டம், ஈச்சனாரி அடுத்த செட்டிபாளையம் பகுதியில் கில்பர் கோ வீடர் ரூட் இந்தியன் பிரைவேட் லிமிடட் என்ற தனியார் எம்.என்.சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு இந்திய அரசின் பெட்ரோலிய துறையின் ஒப்பந்தத்தின் பேரில் பெட்ரோல் பம்புகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் 100 நிரந்தர ஊழியர்களும், 150-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களும் என 250-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.



இந்நிலையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்களை திங்கட்கிழமை முதல் பணிக்கு வரவேண்டாம் என நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஒப்பந்த ஊழியர்கள் நிறுவனத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து கில்பர் கோ வீடர் ரூட் இந்தியன் பிரைவேட் லிமிடட் நிர்வாகத் தரப்பில், அரசின் ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டதாகவும் இதனால் தொழிலாளர்களுக்கு வேலை வழங்க இயலாது என விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவன ஊழியர்கள் கூறுகையில், திடீரென ஒப்பந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்வது இந்நிறுவனத்தின் வாடிக்கையாக உள்ளது. இதனை தடுக்கவே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். 

எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென பணிக்கு வர வேண்டாம் என நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனை நம்பி உள்ள தொழிலாளர்களின் குடும்பங்கள் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்படக் கூடும்.

மூன்று மாத கால அவகாசம் வழங்க வேண்டும் அல்லது மூன்று மாத ஊதியத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை உள்ளிருப்பு போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...