உதகையில் கன மழை - மக்கள் மகிழ்ச்சி

உதகைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடும் வெயில் நிலவி வந்ததால் குடியிருப்பு பகுதிகள் மட்டுமின்றி வனப்பகுதிகளிலும் கடும் வறட்சி நிலை ஏற்பட்டது.

விவசாயத்திற்கான நீரில் தட்டுப்பாடு ஏற்பட்டு பெரும்பாலான பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த தேயிலை செடிகள் கருகின. மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இந்நிலையில், தற்போது பருவமழை தொடக்கத்தின் காரணமாக அவ்வப்போது நீலகிரி, உதகை, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் இரவு, பகல் என மழை பெய்து வருகிறது.

உதகைக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று பகலில் பெய்யத்துவங்கிய மழை இரண்டு மணி நேரத்தினையும் கடந்து கன மழையாக பெய்து வருகிறது. உதகை உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் இந்த மழையின் காரணமாக வனங்களில் பசுமை திரும்பும் என அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Newsletter

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...