தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் மூன்றாவது ஆண்டாக சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கு. ராமசாமி தலைமையுரை வழங்கினர்.

அப்போது அவர் பேசுகையில், வேளாண் மாணவர்களுக்கு ஆராய்ச்சி மூலம் உற்பத்தியை பெருக்கி, பெருகி வரும் மக்கள் தொகைக்கு உணவளிக்கும் கடமை இருப்பதால் தங்களை உடலிலும், மனதிலும் உறுதியாக வைத்துக் கொள்ள வேண்டுமானால் யோகாக்கலையே அதற்கு பெரிதும் துணைபுரியும். சற்றே மாறுபட்டாலும் குருகுல முறை இந்தியாவில் தொன்றுதொட்டு பயன்பாட்டில் உள்ளதை யோகாக்கலை மூலம் தெளிவாக அறியலாம்.

யோகாக்கலை அறிவியல் பூர்வமானது, இதனை கடைபிடிப்பதில் உடல் நலம், மன நலம் இரண்டும் ஒருங்கே பெற்று மாணவர்கள் வாழ்வில் முன்னேற முடியும் என்றும் கூறினார்.
கோவை மண்டலத்தின் உலக சமுதாய சேவை மையத்தின் தலைவர் ரா.பச்சையப்பன் மற்றும் செயலாளர் மற்றும் இணை இயக்குனர் (விரிவாக்கம்) பி.ஹரிதாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

பின்னர் மாணவ, மாணவியர் அமர்ந்த நிலை மற்றும் நின்ற நிலையில் செய்யும் பயிற்சிகள், "TNAU" என்ற எழுத்துக்கள் வடிவில் நிற்றல் மற்றும் கண் பயிற்சி போன்றவற்றை செய்தனர். பல்கலைக்கழக மாணவர்களின் யோகா செயல் விளக்கம் அனைவரையும் கவரும் வகையில் இருந்தது.

விழாவிற்கு பல்கலைக்கழக பதிவாளர் சி.ஆர்.ஆனந்தகுமார், வேளாண் கல்லூரி முதன்மையர் ச.மகிமைராஜா மற்றும் பேராசிரிகர்கள் பங்குக் கொண்டு சிறப்பித்தனர். உலக சமுதாய சேவை மைய யோகா ஒருங்கிணைப்பாளர் ரமா ராஜேந்திரன் வரவேற்புரையாற்றினார். டி.அருன் குமார் முதலாமாண்டு (வேளாண்மை) மாணவர் நன்றியுரை வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், வேளாண் மாணவர்களுக்கு ஆராய்ச்சி மூலம் உற்பத்தியை பெருக்கி, பெருகி வரும் மக்கள் தொகைக்கு உணவளிக்கும் கடமை இருப்பதால் தங்களை உடலிலும், மனதிலும் உறுதியாக வைத்துக் கொள்ள வேண்டுமானால் யோகாக்கலையே அதற்கு பெரிதும் துணைபுரியும். சற்றே மாறுபட்டாலும் குருகுல முறை இந்தியாவில் தொன்றுதொட்டு பயன்பாட்டில் உள்ளதை யோகாக்கலை மூலம் தெளிவாக அறியலாம்.

யோகாக்கலை அறிவியல் பூர்வமானது, இதனை கடைபிடிப்பதில் உடல் நலம், மன நலம் இரண்டும் ஒருங்கே பெற்று மாணவர்கள் வாழ்வில் முன்னேற முடியும் என்றும் கூறினார்.
கோவை மண்டலத்தின் உலக சமுதாய சேவை மையத்தின் தலைவர் ரா.பச்சையப்பன் மற்றும் செயலாளர் மற்றும் இணை இயக்குனர் (விரிவாக்கம்) பி.ஹரிதாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

பின்னர் மாணவ, மாணவியர் அமர்ந்த நிலை மற்றும் நின்ற நிலையில் செய்யும் பயிற்சிகள், "TNAU" என்ற எழுத்துக்கள் வடிவில் நிற்றல் மற்றும் கண் பயிற்சி போன்றவற்றை செய்தனர். பல்கலைக்கழக மாணவர்களின் யோகா செயல் விளக்கம் அனைவரையும் கவரும் வகையில் இருந்தது.

விழாவிற்கு பல்கலைக்கழக பதிவாளர் சி.ஆர்.ஆனந்தகுமார், வேளாண் கல்லூரி முதன்மையர் ச.மகிமைராஜா மற்றும் பேராசிரிகர்கள் பங்குக் கொண்டு சிறப்பித்தனர். உலக சமுதாய சேவை மைய யோகா ஒருங்கிணைப்பாளர் ரமா ராஜேந்திரன் வரவேற்புரையாற்றினார். டி.அருன் குமார் முதலாமாண்டு (வேளாண்மை) மாணவர் நன்றியுரை வழங்கினார்.