ஜிஎஸ்டி வரியை பூதம் என நினைத்து தொழில்துறையினர் பயப்படத் தேவையில்லை- நிர்மலா சீத்தாராமன்

ஜிஎஸ்டி வரியினை பூதம் என நினைத்து தொழில் துறையினர் பயப்படத் தேவையில்லை எனவும், ஆரம்ப காலங்களில் தவிர்க்க முடியாத சிரமங்களை ஏற்படுத்தினாலும் நாட்டிற்கு பயனளிக்கும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.



கோவை சிட்ரா பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் பாஜக சார்பில் ஜிஎஸ்டி வரி நடைமுறை குறித்த கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இதில் மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் மற்றும் தொழில்துறையினை சார்ந்தவர்களும் பங்கேற்றனர்.



இந்நிகழ்ச்சியில் ஜிஎஸ்டி தொடர்பான தொழில் துறையினரின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.  இதையடுத்து நிர்மலா சீதாராமன் பேசுகையில், ஜிஎஸ்டி தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அனைத்து சந்தேகம் மற்றும் கேள்விகளுக்கு பதிலளிக்க அந்தந்த தொழில் வர்த்தக சபைகளில் ஏற்பாடு செய்ய வேண்டும். ஜிஎஸ்டி கீழ்மட்ட ஊழலை ஒழிக்க சிறந்த திட்டம்.இத்திட்டத்தை எதிர்ப்பது நாட்டுக்கு நல்லத்தல்ல. ஜிஎஸ்டி நிறைவேற்றப்பட்டாலும் இன்னும் இரு மாதங்களுக்கு அதில் தொழில் துறையினர் தவறாக தகவல்கள் பதிவு செய்தாலும் அபராதம் வசூலிக்கப்படாது. 

ஜிஎஸ்டி வரிவிதிப்பு என்பது பாஜக அரசு மட்டும் கொண்டு வந்ததல்ல. இது அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்பட்டது. ஜிஎஸ்டி கவுன்சிலில் அனைத்து மாநில நிதி அமைச்சர்கள், தொழில்துறையினர் உள்ளிட்டோருடன் கலந்து பேசி வரி விதிப்பு முடிவு செய்யப்பட்டது. ஜிஎஸ்டியை பூதம் என நினைத்து தொழில் துறையினர் பயப்படத் தேவையில்லை. ஆரம்ப காலங்களில் தவிர்க்க முடியாத சிரமங்களை ஏற்படுத்தினாலும் நட்டிற்கு பயனளிக்கும்" என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.



தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீத்தாராமன், நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையினால் சுங்கச்சாவடி மற்றும் சோதனைச் சாவடிகளில் காத்திருக்கும் நேரம் பாதியாக குறையும். ஜிஎஸ்டியினால் தொழில் துறையினருக்கு பாதிப்பு ஏற்படும் என்பது தவறான பிரச்சாரம்" என்றார். எனவும் தெரிவித்தார்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...